ஏன் ஒரு சவரன் 8 கிராமாக கணக்கிடப்படுகிறது தெரியுமா? 200 வருட வரலாறு!
தங்கம் வாங்கும் போது ஒரு சவரன், ஒரு பவுன் என்று சொல்வது வழக்கம். ஆனால் ஏன் 1 சவரன் சரியாக 8 கிராம் ஆக கணக்கிடப்படுகிறது. ஏன் 5 கிராமோ அல்லது 10 கிராமோ போன்ற முழுமையான எண்ணாக இல்லை? இந்தக் கேள்விக்கு பதில் தேடினால் 200 வருடங்களுக்கு பின்னால் செல்ல வேண்டியுள்ளது.
சவரன் என்ற வார்த்தை உருவானது பிரிட்டிஷ் Gold Sovereign நாணயத்திலிருந்து தான். 1817-ம் ஆண்டு பிரிட்டன் அரசு முதன் முதலில் இந்த நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தின் உண்மையான எடை 7.988 கிராம் கொண்டது.

Gold Sovereign நாணயம் 7.988 கிராம் எடை பெறவும் முக்கிய காரணம் உண்டு, அக்காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 20 பிரிட்டிஷ் ஷில்லிங் காயின் எடையும் 7.988 கிராம். அந்தக் காலத்தில் எடைக்கான மெட்ரிக் அமைப்பு இல்லாததால், இந்த பிரிட்டிஷ் நாணயம் எடையை பல இடத்தில் முக்கிய புள்ளிவிபரமாக பயன்படுத்தப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 20 பிரிட்டிஷ் ஷில்லிங் காயின் எடை அடிப்படையில் கோல்டு சவரின் காயின் தயாரிக்கப்பட்டது.
ஏன் 7.988 கிராம் 8 கிராம் ஆனது?
இந்த நாணயமும் அதன் எடைத் தரநிலையும் இந்தியாவுக்கு, குறிப்பாக தென்னிந்தியாவுக்கு வர்த்தகத்திற்காக வந்தபோது, வியாபாரிகள் மற்றும் நகைக்கடைக்காரர்களுக்கு 7.988 கிராம் என்ற தசம எண் கடினமாக இருந்தது. தங்கம் வாங்கும் போது - விற்கும் போது அடிக்கடி கணக்கு போட வேண்டியிருக்கும். தசமப் புள்ளிகளுடன் கணக்கிடுவது நேரத்தை வீணாக்கும். இதேபோல் 7.988 கிராம் என்பதை துள்ளியமாக கணக்கிடவும் எடை இயந்திரங்கள் அக்காலக்கட்டத்தில் இல்லை.
இதனால் வியாபார வசதிக்காக 8 கிராம் என்று முழுமையாக கணக்கு வைக்கப்பட்டது. இந்தத் தோராயமான எடை படிப்படியாக தென்னிந்திய தங்கச் சந்தையில் நிலையான எடை தரநிலையாக மாறியது. இன்று ஒரு சவரன் என்றால் அனைவரும் 8 கிராம் என்றே புரிந்துகொள்கிறார்கள்.
5 கிராம் அல்லது 10 கிராம் ஏன் இல்லை?
இந்தியாவில் தானாக ஒரு தங்க அளவு உருவாக்கியிருந்தால், 5 அல்லது 10 கிராம் போன்ற எண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் சவரன் முறை பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பயன்படுத்திய வழக்கம். ஏற்கெனவே மக்களிடையே பரவலாக அறிமுகமான ஒரு அளவை மாற்றுவதை விட, மக்களிடம் பழக்கப்பட்ட விஷயத்தை மேம்படுத்துவது எளிதாக இருந்தது.
22 காரட் தங்கம்
சவரன் நாணயம் 22 காரட் (91.67% தூய்மை) தங்கத்தால் செய்யப்பட்டது. மீதமுள்ள 8.33% செம்பு கலக்கப்படுகிறது. 24 காரட் தூய தங்கம் மிக மென்மையானது. அதனால் நாணயமாகவோ, நகையாகவோ 24 காரட் தங்கத்தை பயன்படுத்துவது கடினம். செம்பு கலப்பதால் வலிமை அதிகரித்தது. இதனால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
தென்னிந்தியா vs வட இந்தியா
8 கிராம் சவரன் முறை பெரும்பாலும் தென்னிந்தியாவில் தான் பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவில் தங்கத்தை தோலா (Tola) என்ற அளவில் அளக்கிறார்கள். ஒரு தோலா சுமார் 11.66 கிராம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தங்க அளவீடு முறை வேறுபடுவது வரலாற்று மற்றும் பிராந்திய வழக்கங்களால் ஏற்பட்டது.
இன்றைய நிலையில் ஒரு சவரன் என்றால் 8 கிராம் என்றே கணக்கிடப்படுகிறது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications