மீண்டும் பஞ்சாப் தனிநாடு கோரும் கும்பல்! ஹரியானாவில் ஆயுதங்களுடன் 4 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது
சண்டிகர்: பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் ஹரியானா மாநிலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் ஒரு தேசிய இனம்; சீக்கியர்களுக்கு தனி நாடு தேவை என்பதை வலியுறுத்தி உருவானதுதான் காலிஸ்தான் இயக்கம். 1980களில் பஞ்சாப் பற்றி எரிய காலிஸ்தான் தீவிரவாதிகளே காரணமாக இருந்தனர். இதனையடுத்து பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசுமேற்கொண்டது.

குறிப்பாக அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நுழைந்து பிந்தரன் வாலே மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. இது ஒட்டுமொத்த சீக்கியர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பழிவாங்கும் வகையில் சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலையின் போது பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்னமும் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் காலாவதியாகிப் போனது. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் காலிஸ்தான் இயக்கத்தை புதுப்பித்தனர்; நாடு கடந்த காலிஸ்தான் அரசாங்கத்தையும் கூட அறிவித்தனர். நாட்டையே உலுக்கிய விவசாயிகள் போராட்டத்தின் போதும் காலிஸ்தான் தீவிரவாதிகள் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. பஞ்சாப் தேர்தலின் போதும் காலிஸ்தான் தீவிரவாதிகள் பேசு பொருளாக இருந்தனர்.
இந்நிலையில் ஹரியானாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் 4 பேர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 4 பேரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வந்ததில் இந்த 4 பேருக்கும் முக்கிய பங்கு இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications