Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''பஞ்சாப்பில் பாகிஸ்தானை பிரதிபலிக்கிறார்கள்..'' - ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடிய பிரதமர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஆம் ஆத்மி தலைவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஆசைப்படுகிறாரா அல்லது காலிஸ்தான் முதல்வராக ஆசைப்படுகிறாரா என பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அப்ரோஹாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''அவர்களுக்கு இந்தியாவை உடைக்க வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும். அதற்காக அவர்கள் பிரிவினைவாதிகளுடன் கைகோர்ப்பார்கள்'' என ஆம் ஆத்மி கட்சிப் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

டெல்லியில் காலூன்றியதைப் போல், பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி வளர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பிரதமர் மேலும் கூறுகையில், ''ஓட்டு வங்கிக்காக நாட்டைப் பிரிக்கத் தயாராக இருக்கிறார்கள். பஞ்சாப் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருந்த கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவரது நெருங்கிய நண்பரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்'' என ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்தும் விமர்சனம் செய்தார் பிரதமர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

''ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை உடைக்க விரும்புகிறார்கள். அதிகாரத்தைப் பெற பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாட்டை உடைக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் பாகிஸ்தானின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதல்ல. அதனால்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் கொள்கையை எதிரொலிக்கிறார்கள். அவர்கள் பஞ்சாபில் போதைப்பொருள் வலையமைப்பை அதிகரிக்க விரும்புகிறார்கள்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காலிஸ்தான் குறித்து பேசி பிரசாரம் செய்து வருகின்றனர். காலிஸ்தானுடன் பிரதமர் இன்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பிரசாரத்தில், ''காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் தீவிரவாதிகள் வீட்டுக்கு செல்வதில்லை'' என கெஜ்ரிவால் காலிஸ்தான் தலைவர் வீட்டில் இருந்ததை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+