''பஞ்சாப்பில் பாகிஸ்தானை பிரதிபலிக்கிறார்கள்..'' - ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடிய பிரதமர்
சண்டிகர்: ஆம் ஆத்மி தலைவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஆசைப்படுகிறாரா அல்லது காலிஸ்தான் முதல்வராக ஆசைப்படுகிறாரா என பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைத் தாக்கிப் பேசியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அப்ரோஹாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடி
தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''அவர்களுக்கு இந்தியாவை உடைக்க வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும். அதற்காக அவர்கள் பிரிவினைவாதிகளுடன் கைகோர்ப்பார்கள்'' என ஆம் ஆத்மி கட்சிப் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.

ஆம் ஆத்மி
டெல்லியில் காலூன்றியதைப் போல், பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி வளர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பிரதமர் மேலும் கூறுகையில், ''ஓட்டு வங்கிக்காக நாட்டைப் பிரிக்கத் தயாராக இருக்கிறார்கள். பஞ்சாப் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருந்த கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவரது நெருங்கிய நண்பரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்'' என ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்தும் விமர்சனம் செய்தார் பிரதமர்.

பாகிஸ்தான்
''ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை உடைக்க விரும்புகிறார்கள். அதிகாரத்தைப் பெற பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாட்டை உடைக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் பாகிஸ்தானின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதல்ல. அதனால்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் கொள்கையை எதிரொலிக்கிறார்கள். அவர்கள் பஞ்சாபில் போதைப்பொருள் வலையமைப்பை அதிகரிக்க விரும்புகிறார்கள்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காலிஸ்தான் குறித்து பேசி பிரசாரம் செய்து வருகின்றனர். காலிஸ்தானுடன் பிரதமர் இன்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பிரசாரத்தில், ''காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் தீவிரவாதிகள் வீட்டுக்கு செல்வதில்லை'' என கெஜ்ரிவால் காலிஸ்தான் தலைவர் வீட்டில் இருந்ததை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications