5 ஆண்டுகளை நெருங்கும் ஜிஎஸ்டி.. ஜூலையில் காத்திருக்கும் அதிர்ச்சி - எதற்கெல்லாம் வரி உயர்வு?
சண்டிகர்: 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் மாதம்தோறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ள மற்றும் விலை குறைய வாய்ப்பு இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் என்னவென்று பார்ப்போம்.
- பேக்கேஜிங் செய்யப்பட்ட மீன், தயிர், லஸ்ஸி, பன்னீர், தேன், உலர்ந்த பருப்பு காய்கறிகள், கோதுமை மாவு, பருப்பு, நாட்டுச் சக்கரை, பொரி, இயற்கை உரம், தேங்காய் துருவல் ஆகியற்றுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படடாது என்றும், 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி. விளக்குகள், அச்சு இங்க், சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான தலைகீழ் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.
- வங்கி செக்குகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
- வரைபடங்கள் (மேப்), சார்டுகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
- ரூ.1,000 க்கும் குறைவான வாடகை கொண்ட ஹோட்டல் அறைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது 12 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
- தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான வரி ஏய்ப்பை தடுக்க மாநிலங்களுக்கு இடையே அவற்றை கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்ட இ வே பில் வரம்பிலிருந்து மாநிலங்கள் கூடுதலாக வரி வரம்பை நிர்ணயிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
GST new rates - List of products and Services have levied high taxes: 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
Story first published: Wednesday, June 29, 2022, 15:18 [IST]