மக்களை தொந்தரவு செய்யாதீங்க... அமைதியாக போராடுங்க... விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்!
சண்டிகர்: பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்ததால் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் வந்தது. இதனால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியாக போராடும்படி விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் போராட்டத்தில் ஈடுபடுதைபோல் அமைதியாக போராடுங்கள் என விவசாயிகளுக்கு அவர் வலியுத்தி உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாபிலும், அதன் எல்லைபுறங்களிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் செல்போன் டவர்களில் சிக்னல் தடை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகள் தொலை தொடர்புகள் பாதிக்கபப்ட்டு வருவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன.இந்த நிலையில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:-
பஞ்சாபில் தொலைதொடர்பு இணைப்பை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம் பஞ்சாப் விவசாயிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டாம். இதுபோன்ற நடவடிக்கைகள் பஞ்சாபின் நலனுக்கானது அல்ல. இந்த செயல் முழுக்க முழுக்க ஆன்லைன் கல்வியை மட்டுமே நம்பி இருக்கும் பள்ளி மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.
மேலும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது. மேலும், ஏற்கெனவே சீர்குலைந்து கிடக்கும் மாநில பொருளாதாரத்தை கூடுதலாக பாதிக்கும். எனவே விவசாயிகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம். டெல்லி எல்லையில் விவசாயிகள் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் போராட்டத்தில் ஈடுபடுதைபோல் அமைதியாக போராடுங்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications