ராகுல் என்னை தீவிரவாதி என்கிறார்.. உங்களுக்கு பதில் இருக்கு.. பஞ்சாப் பிரசாரத்தில் கெஜ்ரிவால் ஆவேசம்!
சண்டிகர்: ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார், ஆனால் பிப்ரவரி 20ம் தேதிக்குப் பிறகு எல்லாவற்றுக்கும் விடைதெரியும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தான் நேரடி போட்டி நிலவுகிறது.
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கெஜ்ரிவாலை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தார். அதற்கு கெஜ்ரிவால் தற்போது பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாப் தேர்தலில் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ''என்ன நடந்தாலும், காங்கிரஸ் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது. ஆனால் ஜாதுவின் (ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம்) தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை'' என ராகுல்காந்தி கூறியிருந்தார்.

பயங்கரவாதி வீட்டில்
2017 தேர்தலின் போது பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதியின் வீட்டில் கெஜ்ரிவால் தங்கியிருந்ததை ராகுல் காந்தி இப்படி தெரிவித்திருக்கிறார் என பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மொகாலியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு பதிலளித்துள்ளார்.

கெஜ்ரிவால்
மொகாலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் பேசுகையில், ''ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார். பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு அவருக்கு எல்லாம் புரிய வரும். காங்கிரஸ் கட்சி எல்லாரையும் மிரட்டி வருகிறது. சாதாரண மக்கள், யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லக் கூட பயப்படுகிறார்கள். அந்த அளவு மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் பயந்துபோய் உள்ளார்கள்.

காங்கிரஸ்
மக்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். என்னை தீவிரவாதி என்கிறார்கள். பிரதமர் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் எல்லோரும் காங்கிரசைப் பார்த்து பயப்படுகிறார்கள். காங்கிரஸ் உட்கட்சிப்பூசலால் அங்கிருந்து பலர், ஆம் ஆத்மிக்கு வருகிறார்கள். ஆம் ஆத்மியை பஞ்சாப் ஏற்றுக்கொண்டதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்று கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications