10,11,12பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்டான மாணவர்களுக்கு மறுதேர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதினர்.

இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதியும் வெளியாக உள்ளன.
இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, மறு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் முழு விவரங்களை கண்டறிந்து வரும் ஜூலை மாதம் நடக்கக் கூடிய உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதே போல், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மீண்டும் அழைக்கப்பட்டு உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications