10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தமிழை விட ஆங்கிலத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்! இதை நோட் பண்ணீங்களா
சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் தமிழ் உட்பட மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் + 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது.

இந்தாண்டு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அதை 4,47,203 மாணவர்கள் 4,47,061 மாணவிகள் என மொத்தம் 8,94,264 பேர் எழுதி இருந்தனர்.
தேர்வு முடிவுகள்: இதற்கிடையே இப்போது 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் 91.55%, அதாவது 8,18,743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களில் 3,96,152 பேரும் மாணவிகளில் 4,22,591 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58% ஆக இருக்கிறது. அதேநேரம் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதம் கூடுதலாக 94.53%ஆக உள்ளது.
கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்வில் 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதி 8.35 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். அந்த ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் 91.39%ஆக இருந்தது. இந்தாண்டு அதை விடத் தேர்ச்சி சதவிகிதம் சற்று உயர்ந்துள்ளது.
பள்ளிகள் வாரியாக: மொத்தம் 12,625 பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், அவற்றில் 4105 பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி இருந்துள்ளது. அதில் 1364 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் வாரியாக பார்க்கும் போது அரசுப் பள்ளிகளில் படித்தோர் 87.90% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.77%ஆக உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.43%ஆக இருக்கிறது.
ஆங்கிலத்தில் தான் அதிகம்: இதில் பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் தான் பலரையும் கவனிக்க வைக்கிறது. பொதுவாக ஆங்கில படம் பலருக்கும் கடினமாக இருக்கும். ஆனால், இந்த முறை மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாகத் தமிழ் மற்றும் மொழிப் பாடங்களைக் காட்டிலும் கூட ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
இந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் 99.15% பேர் ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களில் 96.85% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல கணிதத்தில் 96.78% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், அறிவியல் பாடத்தில் 96.72% பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 100க்கு 100 மார்கும் ஆங்கிலத்தில் மொத்தம் 415 போர் பெற்றுள்ளனர். இது தமிழ் மற்றும் மொழிப் பாடத்தைக் காட்டிலும் அதிகம். தமிழ் மற்றும் மொழிப் பாடத்தில் 8 பேர் மட்டுமே 100க்கு 100 மார்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications