12 வயதுதான்.. சென்னையில் சிறுமியை தாக்கிய கரும்பூஞ்சை.. மருத்துவமனையில் அனுமதி.. எப்படி ஏற்பட்டது?
சென்னை: சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி இன்று காலை பாதிக்கப்பட்டார்.
Recommended Video
கொரோனா இரண்டாம் அலையே சமாளிக்க முடியாத அளவில் இந்தியா முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. தினசரி கேஸ்கள் இந்திய அளவில் குறைந்தாலும் கூட, கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் தினமும் 4000க்கும் அதிகமாக இந்தியாவில் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் தினசரி கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிளாக் பங்கஸ் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூகோமைகோசிஸ் தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
இதையடுத்து தற்போது கரும்பூஞ்சை நோயை மத்திய அரசு தொற்று நோயாக அறிவித்துள்ளது. தமிழகத்திலும் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த கரும்பூஞ்சை பாதிப்பு பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரை 9 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று
இந்த நிலையில் இன்று சென்னையில் கருப்பு பூஞ்சை நோயால் 12 வயது சிறுமி பாதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரை சேர்த்து தமிழகத்தில் இதுவரை 10 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

கண்காணிப்பு
தமிழகத்தில் இதுவரை இந்த கரும்பூஞ்சை தாக்கிய 10 பேரில் 6 பேருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. இவர்களில் 9 பேருக்கு கொரோனா சிகிச்சை தீவிரமாக அளிக்கப்பட்டது. இவர்களுக்கு ஸ்டிராய்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால்
ஆனால் இந்த 12 வயது சிறுமிக்கு எப்படி கரும்பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை. எதன் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அந்த சிறுமியை தற்போது சோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications