தொடர்ந்து சரியும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்: தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு பாதிப்பு: 23 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் வேகமாக சரிந்து வருகிறது. கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு முக்கியமான தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
குடும்பத்திற்கு ரூ 2.5 லட்சம் கடன் இருக்கு.. ஆனா ரூ 7 லட்சம் திட்டங்கள் செய்துள்ளோமே.. அதிமுக
சினிமா தியேட்களுக்கு அனுமதி 50 சதவிகித மக்களோடு அனுமதி தரப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கவும் அனுமதி தரப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 1 முதல் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநில பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கேஸ்கள்
இந்த நிலையில்தான் இன்றும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைவாக பதிவானது. தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,709 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
குணம்
தமிழ்நாட்டில் இன்று 1,827 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தொடர்ந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 25,47,005 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 19,171 ஆக குறைந்து உள்ளது.
டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,00,885 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,55,607 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,54,998 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 4,00,19,058 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் இன்று 177 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2129 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 198 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2229 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 146 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1728 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.