அன்று கட்சியில் அவமானம்! இன்று மக்கள் தந்த வெகுமானம்! சென்னை மாநகராட்சியில் 2 சுயேச்சைகள் வெற்றி!
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி 2-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கோமதி கணேஷ் என்பவரும், 23-வது வார்டில் சுயேச்சையாக களம் கண்ட ராஜன் என்பவரும் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற போதும் அவர்களுக்கு சீட் வழங்கப்படாததால் தனித்து களம் கண்டு தாங்கள் யார் தங்களின் பலம் என்ன என்பதை கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு நிரூபித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி'
சென்னை மாநகராட்சியில் அதிக வார்டுகளை கைப்பற்றி திமுக வெற்றிமுகத்தில் உள்ள நிலையில், 2 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். திமுகவை சேர்ந்த கோமதி கணேஷ் என்பவர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கேட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் மறுத்த காரணத்தால், தனித்து சுயேச்சையாக போட்டியிட்டு இன்று கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார். இதனிடையே இவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி
இதேபோல் சென்னை மாநகராட்சியின் 23-வது வார்டில் ராஜன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு திமுக கூட்டணியில் வார்டு கொடுக்கப்படாததால் தனித்து களம் இறங்கி தனது மக்கள் செல்வாக்கை கட்சித் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகிக்கும் நிரூபித்துள்ளார். இவரும் தனது ஆதரவை திமுகவுக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுயேச்சைகள்
இவர்களை போலவே தமிழகம் முழுவதும் கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் தமிழகம் தழுவிய அளவில் பரவலாக வெற்றி பெற்றிருக்கின்றனர். மிகவும் இழுபறியான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மட்டும் சுயேச்சைகளின் ஆதரவு கட்சிகளுக்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களின் ஆதரவை பொறுத்தே அந்த நகராட்சியை திமுகவோ, அதிமுகவோ கைப்பற்ற முடியும்.

மக்கள் செல்வாக்கு
தலைநகர் சென்னையை பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, சுயேச்சையாக களமிறங்கி தங்களின் பலத்தை நிரூபித்து தாங்கள் யார் எனக் காட்டிய சென்னை மாநகராட்சியின் 2 சுயேச்சை கவுன்சிலர்களுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications