Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் அரசு இடத்தை பூர்வீக சொத்தாக்கிய சகோதரிகள்! ரூ1.5 கோடிக்கு மளிகைகடைகாரருக்கு விற்று விபூதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புறம்போக்கு இடத்தை தங்களது பூர்வீக சொத்து எனக் கூறி ரூ.1.50 கோடிக்கு விற்பனை செய்து மளிகைக் கடை வியாபாரியை ஏமாற்றிய சகோதரிகள் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

நிலம் வாங்கும் போது எப்போதுமே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிலத்தை வாங்கும் போதே அதில் வில்லங்கம் இருக்கிறதா? முறையான ஆவணங்கள் உள்ளதா? என அனைத்தையும் பரிசோதித்து வாங்க வேண்டும். இல்லையென்றால் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் திரட்டி, வாங்கும் நிலத்தால் பின்னாளில் பெரிய பெரிய சிக்கல்கள் வந்து நிற்கும்.

Chennai extraneous land fraud

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் நிலமோசடி சம்பவங்களும் அடிக்கடி நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. சென்னை வில்லிவாக்கத்தில் தற்போது அப்படியான ஒரு சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது. மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் சகோதரிகள் 1.5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்தாவது:- சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சாமூண்டீஸ்வரி (வயது 45), சந்திரா (30) ஆகிய சகோதரிகள் உள்பட 3 பேர் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தங்களின் பூர்வீக சொத்து வில்லிவாக்கம் எம்டிஎச் சாலையில், 9,108 சதுர அடி இருப்பதாகவும், அதை விற்க போவதாகவும் கூறி, அதற்கான டாகுமெண்ட்களை காண்பித்தனர்.

நானும் அதனை நம்பி, அந்த நிலத்தை ரூ. 1.50 கோடிக்கு வாங்கினேன். ஆனால், பிறகு விசாரித்ததில், அந்த இடம் புறம்போக்கு இடம் என்பது தெரிந்தது. எனவே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தங்களது பூர்வீக சொத்து என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மோசடி செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டதாக சாமூண்டீஸ்வரி, சந்திரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சகோதரிகளான அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில், மளிகைக் கடைக்காரரிடம் ஒன்றரை கோடி நிலம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+