தமிழ்நாட்டில் இன்று 452 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: கொரோனாவிலிருந்து மீண்ட 460 பேர்!

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 452 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,48,275 ஆக உயர்ந்துள்ளது.

    452 people tested positive and 3 more died for Coronavirus today in Tamilnadu

    அதேபோல கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். மேலும், 460 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது 4,109 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 120 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தற்போது 1627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 51,148 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டது. தற்போது வரை மாநிலம் முழுவதும் 1,71,20,745 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+