தமிழகத்தை நோக்கி... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் புயல்... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
Recommended Video
சென்னை : 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து வருகிறது. இதற்கு ஃபனி புயல் என பெயரிடப்பட்டுள்ளது. கடலூர் - வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபனி புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
பொறியியல் படிப்பு கவுன்சலிங்.. மாணவர்கள் எளிதாக பங்கேற்கே, 42 உதவி மையங்கள்.. முழு விவரம்
முன்னதாக, கடந்த 1966ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்னும் 24 மணி நேரத்திற்குப் பிறகே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் 2 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.