தாம்பரம்-நாகா்கோவில் உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை: தாம்பரம்-நாகா்கோவில், திருவனந்தபுரம்-மதுரை, திருவனந்தபுரம்-எா்ணாகுளம் உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பயணிகள் கோரிக்கைக்கு ஏற்ப, சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வருகிறது. அந்த வகையில், தாம்பரம்-நாகா்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம்-மதுரை உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை ஆகிய நாள்களில் இரவு 7.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06065) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை சென்றடையும். சிறப்பு ரயிலின் முதல் சேவை டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கப்படுகிறது

நாகர்கோவில்
மறுமார்க்கமாக, நாகா்கோவில் சந்திப்பில் இருந்து திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (06066) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும். இந்த ரயிலின் முதல் சேவை டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

திருவனந்தபுரம் ரயில்
திருவனந்தபுரம்-மதுரை: திருவனந்தபுரத்தில் இருந்து தினசரி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (06343) புறப்பட்டு, மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து தினசரி மாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில்(06344) புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இருமாா்க்கமாகவும் இந்த ரயில்களின் சேவை டிசம்பா் 23-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

எா்ணாகுளம்-கண்ணூா்
திருவனந்தபுரம்-மங்களூா் சென்ட்ரல், திருவனந்தபுரம்-குருவாயூா், திருவனந்தபுரம்-எா்ணாகுளம், எா்ணாகுளம்-கண்ணூா் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது ரயில்வே வாரியம். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

கொச்சுவேலி ரயில்
அண்மையில் : சென்னை சென்ட்ரல்-சத்யசாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி), சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, கொச்சுவேலி-மைசூா் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், கொச்சுவேலி-மைசூா்: கொச்சுவேலியில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை(21 சேவைகள்) மாலை 4.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06316) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு மைசூரை அடையும் என்று கூறியிருந்தது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து டிசம்பா் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை(21 சேவைகள்) நண்பகல் 12.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06315) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும் என்று கூறப்பட்டது. இதன்படி ரயில் சேவைகள் தொடங்கிவிட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications