சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 7 பேர் பலி- மொத்த பாதிப்பு 13,967 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 689 பேருக்கு கொரோனா உறுதியானது. வெளிநாடுகளில் கொரோனா நெகட்டிவ் என முடிவு அறிவிக்கப்பட்ட தமிழகம் திரும்பிய 7 பேருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்த வந்த 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!

தமிழகம் திரும்பிய 79 பேருக்கு கொரோனா

தமிழகம் திரும்பிய 79 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களில் மட்டும் 76 பேருக்கு கொரோனா உறுதியானது. கேரளா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதனடிப்படையில் தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா புதிய பாதிப்பு இல்லை

கொரோனா புதிய பாதிப்பு இல்லை

இன்றைய கொரோனா பாதிப்பில் 479 பேர் ஆண்கள்; 297 பேர் பெண்கள். மொத்த பாதிப்பில் 8975 பேர் ஆண்கள்; 4,989 பேர் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். தமிழகத்தில் இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு எதுவும் இல்லை.

சென்னையில் மட்டும் 567

சென்னையில் மட்டும் 567

சென்னை மாவட்டத்தில் மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதர மாவட்டங்கள் பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு 34; திண்டுக்கல்- 1; கள்ளக்குறிச்சி -1 ; காஞ்சிபுரம்- 13; கரூர்-1 ; மதுரை- 2; ராணிப்பேட்டை- 4 ; சிவகங்கை- 1; தென்காசி 5; தஞ்சாவூர் 1; தேனி- 3; திருப்பத்தூர்- 1; திருவள்ளூர்- 42; திருவண்ணாமலை 3; தூத்துக்குடி 5; வேலூர்- 1; விழுப்புரம்- 4;

மொத்த மரணம் 94

மொத்த மரணம் 94

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் மரணடைந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. பிற நாடுகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா உறுதியாவதுதான் தற்போதைய புதிய சவால். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

English summary
TamilNadu Health Minister Vijayabaskar said that 776 test positive for Coronavirus in Tamil Nadu on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X