லண்டன் போனதும் தந்தையை மறந்த 'பாசக்கார' மகள்! லோக்கல் ரயிலில் போளி விற்று வாழும் 80 வயது தந்தை
சென்னை: "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்று சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர், பெற்றோரை பராமரிப்பதில் காட்டும் அக்கறையின்மை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதற்கு உதாரணம்தான் இன்று நடந்த சம்பவம்.
Dr Mouth Matters எனும் ட்விட்டர் பயனர், சென்னையின் லோக்கல் ரயிலில் போளி விற்கும் முதியவர் குறித்து எழுதியிருக்கும் பதிவு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இனிப்பு போளியின் ஒவ்வொரு கடிக்கும் பின்னால் இருக்கும் கண்ணீர் என்கிற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

"கடின உழைப்புக்கு தள்ளப்பட்ட 80 வயது முதியவரை இன்று பார்த்தபோது எனது இதயம் நொறுங்கிவிட்டது. தன்னையும் தன்னுடைய மனைவியையும் பாராமரித்துக்கொள்ள, பிஸியான புறநகர் ரயிலில் இவர் இனிப்பு போளியையும், அதிரசத்தையும் விற்று வருகிறார். லண்டனில் வசிக்கும் இவரது மகள் இவரை கைவிட்டதால்தான் இந்த நிலைமை. 70வயதை கடந்த இவரது மனைவி, வீட்டில் இனிப்புகளை செய்து கொடுக்கிறார். அதை இவர் வெளியில் கொண்டு வந்து தன்மானத்துடன் விற்பனை செய்கிறார்.
நான் இவரிடம் போளியை சுவைத்தேன். அது அவ்வளவு பிரமாதமாக இருந்தது. நம்புங்கள், அது பிரஷானதாகவும், தெய்வீக மனம் கொண்டதாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருந்தது. ஒருவேளை நீங்கள் அவரை சந்தித்தால், நீங்கள் வாங்குவது வெறும் போளி மட்டுமல்ல, தளராத தைரியத்தையும், மன உறுதியையும்தான். அவருக்கு உதவ தோன்றினால், அவருடைய எண்ணை தொடர்பு கொண்டு அவரை கண்டுபிடித்து, அவருக்கு ஆர்டர் கொடுங்கள்.
சில நேரங்களில் அற்புதமான உணவுகள், சொல்லப்படாத கதைகளையும் தாங்கி வருகின்றன. நமது முதியவர்கள் தங்கள் இறுதி காலங்களில் கைவிடப்பட்டதாக உணர இனியும் நாம் அனுமதிக்க வேண்டாம்" என்று எழுதியுள்ளார்.
இந்த பதிவை ஏறத்தாழ 33 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். 900க்கும் அதிகமானோர், கமென்ட் செய்திருக்கிறார்கள். பலரும் இந்த முதியவருக்கு உதவ விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
Polis, Sweets & Tears behind every bite ❤️ 😭 “Today, my heart broke when I saw an 80-year-old got pushed into hardship. Abandoned by his own daughter who now lives in London, he has taken up selling sweets and polis on the busy trains of Chennai, to support himself and his… pic.twitter.com/6wpuOzpwwk
— Dr Mouth Matters (@GanKanchi) September 9, 2025
நாம் உழைக்கிறோம், நாள்தோறும் உழைக்கிறோம். உழைப்பில் எல்லாம் மாறுகிறது. முதியவரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் உழைப்பில் ரயில் பயணிகளுக்கு உணவு கிடைக்கிறது. கட்டிட தொழிலாளி புதிய அடையாளங்களையும், சாலை போடுபவர்கள், புதிய பாதைகளையும், தூய்மை பணியாளர்கள் புதிய நகரத்தையும் உருவாக்குகிறார்கள். ஆனால் இறுதியில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? நம் உழைப்பில் புதிய நகரம் உருவாகிறது. நகரத்தை உருவாக்கிய நாம் எங்கே இருக்கிறோம்?
முதியவரின் வாழ்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரின் இந்த நிலைக்கு காரணம் யார்? அவரை போலவே இருக்கும் மூத்த குடிமக்களின் நிலைமைக்கு காரணம்தான் என்ன?
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications