தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.... மேலும் 867 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மேலும் 352 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகிறது. 500- க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 800-க்கும் மேல் சென்று விட்டது. சென்னையிலும் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,43,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மேலும் 352 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 64,193 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தருமபுரி, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏதும் பதிவாகவில்லை.












Click it and Unblock the Notifications