தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு- 2 விசைபடகுகள் பறிமுதல்!
சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது மண்டபம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளாக கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். ஆனால் எல்லை தாண்டி தங்களது நாட்டுக்குள் தமிழ்நாடு மீனவர்கள் நுழைவதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது என அட்டூழியங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இதுவரை சுட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையின் இந்த அத்துமீறல் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படவே இல்லை.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்தார். அப்போதும் தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 மீனவர்களும் சென்ற 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இச்சம்பவம் மண்டபம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications