விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 பேர் இன்று கொரோனாவால் மரணம்
சென்னை: விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மொத்தம் 54 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 3940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மொத்தம் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 82,275 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,079 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தையும் இன்று கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறது. விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பால் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஜூன் 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதேபோல் திருவள்ளூரில் 17 வயது சிறுவனும் செங்கல்பட்டில் 29 வயது இளைஞரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரில் முதியவர்கள் அதிக எண்ணிக்கை என்கிறது தமிழக அரசின் அறிக்கை.












Click it and Unblock the Notifications