Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிஸ்ட்டிலேயே இல்லையே.. எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் வைத்த புதிய செக்.. பாஜகவுக்கும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா சிறைக்கு சென்ற போது எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாக அதிமுகவில் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார். இதன் காரணமாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் பணியாற்றி வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதன்பிறகு அவரது ஒவ்வொரு நகர்வும் எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையில் உள்ளது. அவரது புதிய முயற்சி என்பது அதிமுகவை தாண்டி பாஜகவுக்கு சிக்கலாகி வருகிறது.


ஏனெனில் நடிகர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இணைந்தால் அதிமுகவிற்கு வர வேண்டிய கணிசமான வாக்குகள் பிரிந்து தவெகவிற்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். அத்துடன் கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். எனவே வெற்றி வாய்ப்பை அதிமுக மற்றும் பாஜக தவறவிட அதிக வாய்ப்பு ஏற்படும். இதுதான் நடைமுறை சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

A new challenge posed by Sengottaiyan to Edappadi Palaniswami creates a problem for the BJP

திமுக கூட்டணியின் பலம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை பலப்படுத்த புதிய வியூகங்களை அனைத்து கட்சிகளுமே கையாண்டு வருகின்றன, ஆளும்கட்சியான தி.மு.க. கூட்டணி வழக்கம் போல் வலுவாக இருக்கிறது.

வலுவான வியூகம் வேண்டும்

இதனை உடைத்து வெற்றி பெற வேண்டும் என்றால், அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான வியூகத்தை அமைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் 2018, 2019, 2020, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வென்று வருகிறது. திமுகவை பொறுத்தவரை எளிமையாக வென்றுவிடலாம் என நினைக்கிறது.

களம் இறங்கிய விஜய்

அதேநேரம் இந்த முறை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை முதன் முறையாக களம் காண்கிறார். முதல்வர் வேட்பாளராக அக்கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள விஜய், மக்கள் சந்திப்பு பயணங்கள், பொது நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அது ஓட்டாக மாறுமா இல்லை அப்படியே வேடிக்கையாக கடந்து செல்வார்களா என்பது தெரியவில்லை..

நடிகர் விஜய் தந்த ஆஃபர்

நடிகர் விஜய், கட்சி தொடங்கியது முதலே கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அறிவித்தது பிற அரசியல் கட்சிகளிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி கூட திமுகவிடம் பேரம் பேசவும், ஆட்சியில் பங்கு கேட்கவும் விஜய்யின்அறிவிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த உடன் யாரையும் பெரிய அளவில் கட்சியில் சேர்க்கவில்லை. அவர் சேர்ந்த பெரிய நபர்என்றால் அது செங்கோட்டையன் தான். எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி ஏற்பட்டதால் பிரிந்து சென்ற அவர், தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த பிறகு அவரது அரசியல் நகர்வு ஒவ்வொன்றுமே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாகவே இருக்கிறது,

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு

த.வெ.க.வுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமும், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு கட்சிகளுமே எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருபதி காரணமாக என்டிஏவில் சேரவில்லை.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய இருவருமே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

ஓபிஎஸ் டிடிவி தினகரன் வருகிறார்கள்

இந்நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை த.வெ.க. கூட்டணிக்கு இழுக்க, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ரகசிய பேச்சுவார்த்தையும் திரை மறைவில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால் அது, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பை பாதிக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். செங்கோட்டையன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க.வினரையும் த.வெ.க. பக்கம் இழுப்பதற்காக செங்கோட்டையன் காய் நகர்த்தி வருகிறாராம். இது பாஜகவிற்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

செங்கோட்டையன் பேச்சு

இதனிடையே ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில், கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. அப்போது செங்கோட்டையன் பேசுகையில், "அனைவரும் சொன்னார்கள், செங்கோட்டையன் எங்கு சென்று சேர்ந்திருக்கிறார் என்று,நான் சேர்ந்துள்ள இடம் கோட்டைக்கு செல்லும் இடமாக உள்ளது. நான் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணங்களை மேற்கொண்டேன் , இரு தலைவர்களோடு பணியாற்றியதற்குப் பிறகு மூன்றாவது தலைவரோடு பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு உருவாக்கப்பட்டுள்ளது,

தேர்தலுக்கு தயார் நிலை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மனம் திறந்து பேசினார், விஜயுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், கள பணி என்பது முக்கியமான ஒன்று, அனைத்து இடங்களுக்கும் கழகத் தலைவருடைய புகழைப் மக்களே பரப்பி வருகின்றனர், எப்போது தேர்தல் வரும் போகிறது நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+