படிப்பு முக்கியம்தான்.. அதுக்குன்னு இப்படியா! சென்னையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. கதறிய பெற்றோர்
சென்னை: சென்னை நங்கநல்லூரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக பள்ளி மாணவர்களின் மரணங்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன. கல்வி கற்றலில் உள்ள முரண்பாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமை, புறக்கணிப்புகள், அவமானங்கள் என ஏராளமான காரணங்கள் இந்த மரணங்களை நியாயப்படுத்த முயல்கின்றன. ஆனால், ஒவ்வொரு தற்கொலைகளும் நம்முடைய சமூகத்தின் மிகப்பெரிய தோல்விகளாகும். நாம்தான் இந்த மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறோம்.

ஆனால், இதை மாற்றுவதற்கான பாதையை நோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வியை அடுத்தடுத்த மரணங்கள் நம்மை பார்த்து கேட்கின்றன. அப்படியாகதான் சென்னை நங்கநல்லூர் மாணவியின் மரணமும் நம்முன்னே மிக்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. 15 வயது மதிக்கத்தக்க மாணவி நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்ற அவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை.
இரவு வரை காத்திருந்த பெற்றோர் உடனடியாக அவரை தேட தொடங்கினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேட தொடங்கினர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. எனவே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாணவியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.
ஒருபுறம் பெற்றோரும், மறுபுறம் போலீசாரும் தேட நாட்கள் மெல்ல நகர்ந்தது. இப்படியாக மூன்று நாட்கள் ஆன நிலையில் நேற்றிரவு தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் பள்ளி சீருடையுடன் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்ட பல்லாவரம் போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ததில் அது காணாமல் போன சிறுமியினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் அறிக்கையும், மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன சிறுமியினுடையது என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து பெற்றோரிடமும், பள்ளியிலும் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை படிக்க சொல்லி பெற்றோர் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. சமீபத்திய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால் பெற்றோர் மாணவியை திட்டியுள்ளனர்.
இதனால் கூட மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். பெற்றோர் திட்டியதால் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications