எனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் மீது தமிழகம் முழுவதும் எழுந்த புகாரை அடுத்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அளந்துவிடும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு கடிவாளம் போட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை.
மேலும், தனியார் ஆய்வகங்களிலும் அதிக கட்டணம் வசூல், முன்னுக்கு பின் முரணான முடிவுகள் உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

தனியார் மருத்துவமனைகள்
மக்கள் கொரோனா பீதியில் உள்ள நிலையில் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி பணம் பார்க்கும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையினருக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பன்மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

லட்சங்களில்
அண்மையில் சென்னையில் உள்ள பி வெல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு 12 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டச் சொல்லியது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததோடு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மருந்தே இல்லாத வியாதிக்கு 12 லட்சம் ரூபாய் கட்டணமா என சமூக வலைதளங்களில் பி வெல் மருத்துவமனை நிர்வாகத்தை விளாசி தள்ளினர் வலைதள ஆர்வலர்கள். இதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை மீது அதிக கட்டண வசூல் புகார் எழுந்துள்ளது.

அதிரடி ஆய்வு
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா சோதனை நடத்தக்கூடிய தனியார் ரத்த மாதிரி ஆய்வகங்களின் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு கண் வைத்துள்ளனர். காரணம், பல இடங்களில் கொரோனா முடிவுகளை முன்னுக்கு பின் முரணாக கூறுவதாகவும், வாரக்கணக்கில் முடிவுகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் எழுந்த புகார் தான். இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால், திருச்சியில் இயங்கி வந்த டாக்டர்ஸ் டைக்னாஸ்டிக் செண்டரை கூறலாம். இந்த ஆய்வகத்தில் கொரோனா இல்லாத நபர்களுக்கும் கொரோனா இருப்பதாக முடிவுகளை வழங்கியதாகவும், முடிவுகளை அளிக்க 20 நாட்கள் வரை எடுத்துக்கொள்வதாகவும் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக அதிரடி ஆய்வு நடத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் அந்த ஆய்வகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டதுடன் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

தவறு இருந்தால்
இதனிடையே அதிக கட்டணப் புகார் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உண்மைத்தன்மை இருந்தால் உரிய மருத்துவமனை, ஆய்வகம் மீது தாராளமாக நடவடிக்கை பாயட்டும் என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications