சிவாஜி பிறந்தநாள் விழா.. பின்னால் ஏறியவரை கை முட்டியால் ஓங்கி குத்திய சிவாஜியின் மகன் ராம்குமார்
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்து ஒருவர் ஏற முயன்றார். இதனால் ஆவேசமான சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
திரை உலகில் இன்று வரை இவரை போல் நடிக்க முடியுமா என்று இளம் நடிகர்கள் முதல் பழம்பெரும் நடிகர்கள் வரை பலரும் வியந்த பார்க்கும் உச்ச நட்சத்திரம் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஏனெனில் அவரது நடிப்பு அந்த அளவிற்கு அசாத்தியமானதாக இருக்கும். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என நடிகர்கள் வந்தாலும், சிவாஜி கணேசனின் நடிப்பு தான் அவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும். அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன்.

பல ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய நடிகர். பல நடிகர்கள், நடிகைகள், ஒரு படத்திலாவது இணைந்து நடித்திருக்க வேண்டும் ஏங்க வைத்தவர் சிவாஜி கணேசன். பல உலக நாடுகளில் விருது பெற்றவர். இந்திய சினிமாவில் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் சிவாஜி கணேசன். இவர் 1928ம் தேதி அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். எனவே அவரது பிறந்த நாள் அக்டோபர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சிவாஜி கணேசனின் நினைவுகளை கூறி அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.'
அந்த வகையில் நடிகர் திலகமான சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நேரில் வந்து சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த விழாவில் சிவாஜி கணேசனின் ஏராளமான ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிலர் மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பின்னால் இருந்து ஒருவர் திடீரென மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி, தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications