Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜி பிறந்தநாள் விழா.. பின்னால் ஏறியவரை கை முட்டியால் ஓங்கி குத்திய சிவாஜியின் மகன் ராம்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்து ஒருவர் ஏற முயன்றார். இதனால் ஆவேசமான சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

திரை உலகில் இன்று வரை இவரை போல் நடிக்க முடியுமா என்று இளம் நடிகர்கள் முதல் பழம்பெரும் நடிகர்கள் வரை பலரும் வியந்த பார்க்கும் உச்ச நட்சத்திரம் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஏனெனில் அவரது நடிப்பு அந்த அளவிற்கு அசாத்தியமானதாக இருக்கும். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என நடிகர்கள் வந்தாலும், சிவாஜி கணேசனின் நடிப்பு தான் அவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும். அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன்.

chennai sivaji ganesan prabhu

பல ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய நடிகர். பல நடிகர்கள், நடிகைகள், ஒரு படத்திலாவது இணைந்து நடித்திருக்க வேண்டும் ஏங்க வைத்தவர் சிவாஜி கணேசன். பல உலக நாடுகளில் விருது பெற்றவர். இந்திய சினிமாவில் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் சிவாஜி கணேசன். இவர் 1928ம் தேதி அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். எனவே அவரது பிறந்த நாள் அக்டோபர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சிவாஜி கணேசனின் நினைவுகளை கூறி அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.'

அந்த வகையில் நடிகர் திலகமான சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நேரில் வந்து சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த விழாவில் சிவாஜி கணேசனின் ஏராளமான ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிலர் மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பின்னால் இருந்து ஒருவர் திடீரென மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி, தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+