Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினாவில் 5 பேர் பலி! மருந்துக்குக் கூட தமிழக அரசை கண்டிக்காத விஜய்! நெட்டிசன்கள் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது தமிழக அரசு இனி வரும் காலங்களில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்திய விமான படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழா காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024

இந்த நிகழ்வுக்கு வருவோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிகழ்வை காண 10 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது. மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.

நேற்றைய தினம் அதிக வெயில் இருந்ததால் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு நிறைய பேர் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த சிகிச்சையிலேயே சரியானது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அது போல் மேலும் 5 பேர் பலியாகிவிட்டனர்.

அவர்களில் ஜான், கார்த்திகேயன், சீனிவாசன், தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் அரசியல் கட்சியினர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் ஒரு வித்தியாசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகள் தமிழக அரசின் பாதுகாப்பு குளறுபடிகளை கண்டித்த நிலையில் விஜய்யோ, பாதுகாப்பு சரியில்லைனு மக்கள் பேட்டியை பார்த்தேன் என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர, அவராகவே எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் வெற்று இரங்கல் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+