இதுதான் கைநடுக்கத்திற்கு காரணம்.. நிலநடுக்கம் வந்த மாதிரி ஆகிவிட்டது.. விஷால் பரபரப்பு விளக்கம்
சென்னை: அன்று உடல்நிலை சரியில்லை. அதை பெரிதாக்கிவிட்டார்கள். நிலநடுக்கம் வந்தா பரபரப்பு ஆகுற மாதிரி ஆக்கிவிட்டனர். இத்தனை பேர் என்னை நேசிப்பது எனக்கு சந்தோசம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத கஜா ராஜா பட ப்ரோமோஷன் விழாவில் விஷால் கலந்து கொண்டார். மிக அதிக பவர் கொண்ட கண்ணாடி அணிந்தபடி வந்தார். முடி எல்லாம் வெட்டி மிக மோசமான தோற்றத்தில் இருந்தார். அவரால் நிற்க கூட முடியவில்லை. அவர் மைக் பிடித்த போது கூட கைகள் நடுங்கியது.

அதோடு அவர் கால்கள் நடுங்கியதால் டிடி அவரை அமர்ந்து பேசும்படி கூறினார். ஒரு காலத்தில் கட்டுமஸ்தாக இருந்த விஷால் இப்படி ஆனது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. அட விஷாலா இப்படி என்று நெட்டிசன்கள் கேட்கும் அளவிற்கு மோசமாக இருந்தது. இது வைரல் பீவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் சிலர் அது காய்ச்சல் அல்ல வேறு எதோ அவருக்கு நடந்துள்ளது என்று விமர்சனங்கள் வைத்தனர். அவர் போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டோரோ என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.
விஷால் விளக்கம்:
இது தொடர்பாக தற்போது விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில், நிலநடுக்கம் வந்தா பரபரப்பு ஆகுற மாதிரி என் கை நடுக்கம் வந்தப்போ பரபரப்பு ஆயிருச்சு.. இப்போ என் கை நடுங்கல, மைக்க கரெக்டா தான் புடிச்சிருக்கேன். மைக் இப்போ ஸ்டடியாத்தான் இருக்கு.. நடுக்கமே இல்லை.. நீங்களே பாருங்க! எனக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி. நான் நன்றாகவே இருக்கிறேன். எனக்கு ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி நன்றி.. உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.,. சாகும்வரை மறக்கவே மாட்டேன் உங்கள் அன்பை
அன்று உடல்நிலை சரியில்லை. அதை பெரிதாக்கிவிட்டார்கள். நிலநடுக்கம் வந்தா பரபரப்பு ஆகுற மாதிரி ஆக்கிவிட்டனர். இத்தனை பேர் என்னை நேசிப்பது எனக்கு சந்தோசம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சுசித்ரா விஷால் புகார்:
இந்த நிலையில்தான் நடிகர் விஷால் மீது பாடகி சுசித்ரா சரமாரி புகார்களை வைத்துள்ளார். இது தொடர்பாக சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.
அதில், விஷாலின் நடுக்கத்திற்கு போதை பொருட்களே காரணம். அவரை பார்த்து ரசிகர்கள் வேண்டுமானால் கலங்கி போகலாம். இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் அடையலாம். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன்.
அவருக்கு இது தேவைதான். நன்றாக அனுபவிக்கட்டும். என் வீட்டிற்கு கணவன் இல்லாத நேரத்தில் இவர் வந்திருக்கிறார் . நன்றாக குடித்துவிட்டு.. போதையை போட்டுவிட்டு கண்கள் எல்லாம் மஞ்சளாக என் வீட்டிற்கு வைன் பாட்டிலோடு வந்திருக்கிறார். என் வீட்டு கதவை தட்டியவர்.. என் கணவர் இல்லை என்று சொன்ன பின்பும் கூட விடாமல் உள்ளே வர முயன்று இருக்கிறார்.
இவர் எல்லாம் என்ன ஜென்மம்.. நான் திட்டி அசிங்கப்படுத்தி அனுப்பிய பின்பே அவர் அங்கிருந்து சென்றார். அவரை பற்றி நீங்கள் வேண்டுமானால் வருத்தம் அடையலாம். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன். அவருக்கு இது தேவைதான். அவர் இத்தனை காலம் செய்த விஷயங்களுக்கு இப்போது அனுபவிக்கிறார். நன்றாக அனுபவிக்கட்டும்., என்று சுசித்ரா குறிப்பிட்டு உள்ளார்.
விஷால் மீது பாடகி சுசித்ரா சரமாரி புகார்களை வைத்துள்ளார். சுசித்ரா வெளியிட்ட அந்த குறிப்பிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications