ஒன்னாம் கிளாஸ் வாத்தியாருக்கு இவ்வளவு சம்பளமா.. கஸ்தூரியின் டிவீட்டால் பெரும் சர்ச்சை
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கருத்து கூறி கஸ்தூரி ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: "ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE யை விட சம்பளம் அதிகம் என ட்வீட் போட்டு சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி!
பொதுவாக நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு, அவற்றை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வருபவர் கஸ்தூரி. சில சமயம், அறிவுஜீவிதனம் என்ற பெயரில் உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயம் சமூக அவலங்களை தன் பதிவுகள் மூலம் கழுவி கழுவி ஊற்றுவார்.
இப்போது விஷயம் என்னவென்றால், சினிமாகாரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் விட்டுவிட்டு ஆசிரியர்களை வம்புக்கு இழுத்து உள்ளார்.

கஸ்தூரி கருத்து
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை, மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து கஸ்தூரியின் கருத்து யாதெனில்:
|
வேலை நிரந்தரம்
"தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலைபளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம்" என்கிறார்.
|
பெரிய சம்பளம்
மேலும் "தனியார் துறையில் நித்யகண்டம் பூர்ணாயுசு என்னும்படியாய் நாக்கு தள்ள வேலை செய்துக்கொண்டு அரசுவேலைக்காரர்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஏமாளிகளுக்கு பெரிய சம்பளம், நிரந்தர வேலை, வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் இதெல்லாம் கனவில் கூட கிட்டாது" என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
|
கூசாம போராட்டமா?
"ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது" என கேட்டுள்ளார்.

கடுப்பில் ஆசிரியர்கள்
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எவ்வளவு ஊதிய உயர்வு கொடுத்தாலும் ஆசிரியர்கள் மேலும் சம்பள உயர்வை கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஒரு தரப்பும், இவர்கள் கேட்கும் கோரிக்கைகள் நியாயமானதுதானே என்று மற்றொரு தரப்பும் தங்கள் வாதங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ஆசிரியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications