Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் பலி.. சிசிடிவியால் வெளிவந்த உண்மை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் மோதி சென்னையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். சாலையில் படுத்து கிடந்த அந்த நபரின் மார்பில் கார் ஏறி இறங்கிய நிலையில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் அன்னை சத்யா நகர் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மஞ்சன் (வயது 55). இவர் நேற்று மாலையில் ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள ரோட்டில் படுத்து கிடந்தார்.

இந்த வேளையில் திடீரென்று ஒரு கார் வந்தது. அப்போது ரோட்டில் படுத்து கிடந்த மஞ்சனை கார் டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கார் அவரது மார்பில் ஏறி இறங்கி சென்றுள்ளார்.

actress-rekha-nair-car-accident-in-chennai-and-killed-55-year-old-person

இதனால் மஞ்சன் அலறியுள்ளார். ஆனால் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மஞ்சனை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மஞ்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மஞ்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான புகாரின் கிண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். அப்போது மஞ்சன் மீது ஏறி இறங்கி சென்ற காரின் பதிவெண் கிடைத்தது.

இதையடுத்து அந்த பதிவெண்ணை அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார் சீரியல் நடிகையான அடையாறில் வசித்து வரும் ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர் நாயகர், வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது தெரியவந்தது.

அதோடு விபத்து தொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாண்டி ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் இந்த விபத்து நடந்தபோது ரேகா நாயர் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+