தேமுதிகவினருக்கு இனி தீபாவளி; அதிமுக- பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்காது: சுதீஷ்
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் கட்சியினருக்கு இனி தீபாவளிதான்; இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்காது என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அதிமுக அணியில் முதலில் 41 தொகுதிகளை கேட்டது தேமுதிக. ஆனால் இதற்கான வாய்ப்புகளே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது அதிமுக.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே சசிகலாவை ஆதரித்தது தேமுதிக. இருந்தபோதும் அதிமுகவும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியதைவிட கூடுதல் இடங்களைக் கேட்டது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு அதிகபட்சம் 13 அல்லது 15 என்கிற நிலையில்தான் இருந்தது அதிமுக.
இதனால் கடுப்பாகிப் போன தேமுதிக இன்று அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், தேமுதிகவினருக்கு இனி தான் தீபாவளி. இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும்.
அதிமுகவில் கேபி முனுசாமி, பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் ஸ்லீப்பர் செல்லாகவும் செயல்படுகிறார் என்றார். அத்துடன் தேமுதிக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்களையும் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications