எதிர்க்கட்சி பாஜகவா? அண்ணாமலை கருத்துக்கு நிருபர்கள் பெயரை சொல்லி ஜெயக்குமார் சொன்ன ‘சுளீர்’ பதில்!
சென்னை : உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக தான் செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அண்ணாமலை ஆயிரம் சொல்வார், உண்மையான எதிர்க்கட்சி யார் என்று மக்களுக்கு தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். ஆனால், மக்கள் தான் இறுதி நீதிபதிகள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் திமுக அரசுக்கு பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியதால், அவர்களே எதிர்க்கட்சி போல செயல்படுவதாக கூறி வந்தனர். அதிமுக - பாஜக இரு கட்சிகள் இடையே, தமிழகத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது யார் என்பதில் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

ஜெயக்குமார்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியாக பாஜகவைத் தான் கருதுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கிட்ட ஜெயக்குமார், "அவர் ஆயிரம் சொல்லட்டும். அவருடைய கட்சியை வளர்ப்பதற்கு அவர் அப்படி பேசுவார். ஆனால், உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணாமலை ஆயிரம் சொல்வார்
எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. இப்போது நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்தால், (அங்கிருந்த ஊடக செய்தியாளர்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்) என்ன சொல்வீர்கள்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி, வருங்காலத்தில் நாங்கள் தான் ஆளுங்கட்சி. எங்களுக்குத்தான் பலம். எங்களுக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்வீர்கள். சொல்லிவிட்டுப் போங்கள்.

வெறும் 3 சதவிகிதம்
ஆனால், மக்கள் தான் இறுதி நீதிபதிகள். அவர்களைப் பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக தான். மிகக்குறைந்த அதாவது 3 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் இன்றைக்கு நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதனால், உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்குத் தெரியும்." எனக் கூறினார்.

திமுக அரசு
மேலும் பேசிய ஜெயக்குமார், "திமுக அரசு மழைநீர் வடிகால் பணிகளை அவசர அவசரமாக செய்கிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். முதல்வரை அவரது அலுவலகத்தில் காண முடிவதில்லை. சாலை போடாமல், புகைப்படத்தைக் காட்டி மோசடி நடக்கிறது. ரூ.3.75 கோடி ஒதுக்கியதாக கூறிய நிலையில், சாலையே இல்லை. மக்களிடம் திமுக அரசு செல்வாக்கு இழந்துவிட்டது." என விமர்சித்துள்ளார்.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications