அதிமுக பொதுச்செயலாளரான என்னையே நீக்குவதா? சென்னை ஹைகோர்ட்டில் இன்று சசிகலா அப்பீல் மனு மீது விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லும் என்ற சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு பிப்ரவரியில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது டிடிவி தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக்கினார் சசிகலா. அதாவது அதிமுகவில் தினகரனை மீண்டும் சேர்த்து அதே நாளில் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் தந்தார் சசிகலா.

சசிகலா நீக்கம்
சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது தர்மயுத்தத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்திருந்தார். அப்பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் பதவிகள் பறிக்கப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

சிட்டி சிவில் கோர்ட் வழக்கு
இப்பொதுக்குழுவின் முடிவுகளை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி வகித்த தமது ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது; ஆகையால் தம்மை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிகலா தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

சசிகலா மனு டிஸ்மிஸ்
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது சசிகலாவின் மனு தள்ளுபடியானது. இது சசிகலாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஹைகோர்ட்டில் அப்பீல்
இதனைத் தொடர்ந்து சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமது தரபின் வாதங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தால் முழுமையாக கேட்கப்படவில்லை. அவ்வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என சசிகலா கூறியிருந்தார்.

ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
இம்மேல்முறையீட்டு மனுவானது கடந்த 4-ந் தேதி நீதிபதி சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜாராகினார். அதிமுக பொதுச்செயலாளரான தமது ஒப்புதல் இல்லாமல் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications