Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொதுச்செயலாளரான என்னையே நீக்குவதா? சென்னை ஹைகோர்ட்டில் இன்று சசிகலா அப்பீல் மனு மீது விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லும் என்ற சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு பிப்ரவரியில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது டிடிவி தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக்கினார் சசிகலா. அதாவது அதிமுகவில் தினகரனை மீண்டும் சேர்த்து அதே நாளில் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் தந்தார் சசிகலா.

 சசிகலா நீக்கம்

சசிகலா நீக்கம்

சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது தர்மயுத்தத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்திருந்தார். அப்பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் பதவிகள் பறிக்கப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

சிட்டி சிவில் கோர்ட் வழக்கு

சிட்டி சிவில் கோர்ட் வழக்கு

இப்பொதுக்குழுவின் முடிவுகளை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி வகித்த தமது ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது; ஆகையால் தம்மை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிகலா தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

சசிகலா மனு டிஸ்மிஸ்

சசிகலா மனு டிஸ்மிஸ்


சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது சசிகலாவின் மனு தள்ளுபடியானது. இது சசிகலாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஹைகோர்ட்டில் அப்பீல்

ஹைகோர்ட்டில் அப்பீல்

இதனைத் தொடர்ந்து சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமது தரபின் வாதங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தால் முழுமையாக கேட்கப்படவில்லை. அவ்வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என சசிகலா கூறியிருந்தார்.

ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

இம்மேல்முறையீட்டு மனுவானது கடந்த 4-ந் தேதி நீதிபதி சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜாராகினார். அதிமுக பொதுச்செயலாளரான தமது ஒப்புதல் இல்லாமல் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+