போகி பண்டிகை.. சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. டெல்லியை கண்முன் காட்டிய தருணம்
Recommended Video
சென்னை: இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழையன கழிதல் , புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப, பழைய பாய்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இன்னும் சிலர் டயர் ஆகியவற்றையும் கொளுத்தி காற்று மாசடைய செய்வர்.
இந்த நிலையில் சென்னையில் காலை முதலே போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது மக்கள் தேவையில்லாத பொருட்களை எரித்தனர். இதனால் பல இடங்களில் மார்கழி பனிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.

எவ்வளோ அளவு
இதனால் காற்று மாசு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மணலியில் 795 குறியீடுகளும், அண்ணாசாலையில் 272 அளவும், வேளச்சேரியில் 100 அளவும் காற்று மாசு பதிவாகியிருந்தது. இதில் மணலியில்தான் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு சென்றது.

சொந்த ஊர்கள்
பொதுவாக காற்று மாசு 50 முதல் 100 வரை இருந்தால் மட்டுமே அந்த காற்றை சுவாசிக்க முடியும். ஆனால் சென்னையில் காற்று மாசால் அதிகாலையில் வாக்கிங் சென்றவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வோர் காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

அதிகாலை
சென்னை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே போகி பண்டிகையையொட்டி புகை மூட்டமாக இருந்ததால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சென்னை காற்று மாசால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

விமானம் ரத்து
இதனால் கொச்சி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தை சுற்றி பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்
இந்த காற்று மாசு டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த காற்று மாசை நினைவுப்படுத்தியது. அங்கு தொடர்ந்த காற்று மாசால் மக்கள் ஆக்ஸிஜனை விலைக்கு வாங்கி சுவாசித்ததை யாரும் மறக்க முடியாது. பழைய பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்காமல் அதை கொளுத்தியதால் காற்று மாசு ஏற்படுத்தியது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications