Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க'.. சரத்குமாரின் முடிவிற்கு எதிராக கொந்தளித்த சமக தொண்டர் .. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் சரத்குமாரின் முடிவிற்கு எதிராக விழா மேடையிலேயே சமக தொண்டர் ஒருவர், கொந்தளித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகிறது.. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

All India Samathuva Makkal Katchi activist angry against Sarathkumar s decision to join BJP

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக இணையுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன.

பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம்.. இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று பெரிய கட்சி உடன் இணைந்துள்ளது. கூட்டணியாக அல்ல.. கட்சி அப்படியே பாஜகவில் இணைந்துள்ளது. சமீபகாலத்தில் நடந்த பெரிய மாற்றம் இதுதான்..

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இன்று இணைத்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மத்தியில் ஒரு சமக தொண்டர் எழுந்து, நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க என்பது போல், கொந்தளித்தார். பாஜகவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கொந்தளித்து கோஷம் போட்டதை கண்ட மற்ற தொண்டர்கள் இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே விழாவில் சரத்குமார் பேசுகையில், "இந்த தேசத்தின் நலனுக்காகவும், நமது வருங்கால இளைய சமுதாயத்தின் நலனுக்காகவும் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் முடிவை நான் எடுத்தேன். இதனை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் எனது முடிவை ஏற்று கொண்டார்கள்..

தலைவர் எவ்வழியோ அவ்வழி என்று தொண்டர்கள் என்னிடம் கருத்தை தெரிவித்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் எந்த இடங்களில் , எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது எனக்கு சங்கடமாக இருந்தது. நமது வலிமைக்கு பாஜக உடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதனால் தான் பா.ஜ.,வுடன் கட்சியை இணைத்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராஜர் போல் இந்தியாவில் ஆட்சி நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த இணைப்பு எழுச்சியின் துவக்கம் , எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக மோடி வந்திருக்கிறார். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைத்துள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+