கொரோனா.. உங்கள் வாட்ஸ்அப், செல்போன் அழைப்புகளை கண்காணிக்கிறதா அரசு? நிஜம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அனைத்து தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சமூக வலைதள சாட்டிங் போன்றவற்றை கண்காணித்து வருவதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தேவையற்ற மெசேஜ்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க கூடாது என்றும் அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், ட்விட்டர், அனைத்து போன் அழைப்புகள், ஃபேஸ்புக் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படுவதாக அந்த வைரல் மெசேஜ் தெரிவிக்கிறது. இதுபற்றி அரசு தரப்பில் கேட்டபோது அவர் எந்த ஒரு கண்காணிப்பு நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

Amidst coronavirus outbreak, govt is not monitoring your calls and messages

அதேநேரம் லாக்டோன் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றிதான் மேற்பார்வை செய்து வருகிறோம். எனவே இதுபோன்ற போலி மெசேஜ்களை பரப்ப வேண்டாம் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலி மெசேஜ்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. இதை அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+