பிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்... சந்திரபாபு நாயுடு பாராட்டு!
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மெகா கூட்டணிக்கு ஆதரவு கோரினேன். ஜனநாயகம் மிகப் பெரும் ஆபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
சிபிஐ, ரிசர்வ் வங்கி விவகாரத்தில் கூட பாஜக ஆட்சி தலையிடுகிறது. தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு எப்போதுமே இருந்ததில்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படுகிறது.
[மெகா கூட்டணியில் இணைகிறது திமுக.. நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் அறிவிப்பு ]

பொருளாதாரம் பாதிப்பு
பொருளாதாரம் மோசமாக உள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டதில்லை . பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2 ஆண்டுகளில் எந்த பலனையும் தரவில்லை. இப்போது நிதித்துறை அமைச்சர் கூறுகிறார் கருப்புப்பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வரியை வசூலிக்க மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார். கருப்புப்பணம் அனைத்தும் இப்போது வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டு விட்டது யாருக்கு இது பயனை தந்திருக்கிறது.

ஜனநாயகத்தை காப்பாற்ற
வங்கிகளும் கூட மோடி அரசு மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர். நாட்டில் நிலையற்ற தன்மை இருக்கிறது, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் அதற்காகத் தான் ஸ்டாலினை சந்தித்துள்ளேன்.

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்
ராகுல் காந்தி, மமதா பானர்ஜியுடன் மீண்டும் சந்திக்கவுள்ளேன். அனைவருமே ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகின்றனர், நாட்டை காப்பாற்ற விரும்புகிறார்கள். நேற்று கர்நாடகாவில் தேவகவுடா, குமாரசாமியை சந்தித்தேன். மறைந்த தலைவர் கருணாநிதியுடன் எனக்கு நீண்ட கால பழக்கம் இருந்தது.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் நான் ஒருங்கிணைக்கிறேன், இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

வேற்றுமைகளை மறந்து
காங்கிரஸ் கட்சியுடன் 40 ஆண்டுகாலமாக எங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்கிறது எனினும் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்றுவது முக்கியம் ஜனநாயம் முக்கியம் என்று தான் நாங்கள் ஒன்றுபட விரும்புகிறோம்.

தமிழகத்தில் அரசாங்கமே இல்லை
தமிழகத்திற்கு பாஜக எதுவுமே செய்யவில்லை. எங்கள் அணியில் இருக்கும் அனைவருமே உறுதியான தலைவர்கள். பிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர். தமிழகத்தில் அரசே இல்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications