உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 25 மேயர் பதவிகளில் ஒரு இடத்தையாவது திமுக வெல்லட்டும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சவாலுக்கு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றன.

Anita Radhakrishnan Throws Challenge to Adhav Arjuna - We ll See in the Local Body Polls

ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி

திமுக கூட்டணியின் தயவால்தான் விஜய் அரசு இருப்பதாகவும், இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் எனவும் திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் தவெக கைப்பற்றும் என்று பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.விற்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சவால் விட்டு ஆணவமாக பேசியுள்ளார். இந்த பேச்சிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் எட்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வருமாம்.

அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா?

அதில், தில் இருந்தால், தைரியம் இருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியை வெற்றி பெற்று காட்டுங்கள் என ஆணவமாக எங்கள் இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார். திடீர் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் தனது பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு, தைரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது. நாங்கள் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக சொல்கிறோம்.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளையும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்" என்றார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

சென்னையில் அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- திமுக இன்னும் தங்களது தோல்விக்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது.
இந்த தேர்தலில், தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 25 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக வெற்றி பெற்று காட்டட்டும். தைரியம், தில் இருந்தால் எங்களோடு மோதிப் பாருங்கள் என்று கூறியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+