10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு
சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, உறுப்பினர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்திய இணையதளத்தில் மக்கள் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். தொடங்கிய 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்களை தாண்டியுள்ளது. இது குறித்து அண்ணாமலையும் உற்சாகத்துடன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை நேற்று தனது புதிய அரசியல் பயணத்தை அறிவித்தார். பாஜகவில் இருந்து விலகிய கையோடு தனிக்கட்சிக்கான அறிவிப்பையும் அண்ணாமலை வெளியிட்டார். அரசியல் இயக்கமாக தொடங்கிய அண்ணாமலை, உறுப்பினர்கள் சேர்க்கைக்கு புதிய இணையதள முகவரிவையையும் வெளியிட்டார். அண்ணாமலை அறிவித்ததில் இருந்து அதில் பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது 11.46 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை நேற்று அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். இதையடுத்து, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார். தனது இயக்கம் தமிழகத்தில் அடுத்த பொதுத்தேதலில் நிச்சயம் போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.
தனது இயக்கத்தில் சேருவதற்காக 'வி த லீடர்ஸ்' (www.wetheleaders.org) என்ற லிங்கையும் பகிர்ந்தார். வி த லீடர்ஸ்இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. ஒரு மணி நேரத்திலே ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை தாண்டி யது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சேர்ந்தது. நேற்று இரவிலேயே உறுப்பினகள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. உறுப்பினர் சேர்க்கை உயர்ந்து கொண்டே சென்றது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்தனர். இன்று காலை உறுப்பினர்கள் எண்ணிக்கை 11.46 லட்சத்தை தாண்டியுள்ளது.
அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று இரவு அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் இருபுறமும் திரண்டு நின்று அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications