Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜி அன்னை இல்லம் வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கு தொடர்ந்த நிறுவனம் எடுத்த புதிய முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், அன்னை இல்லம் வீடு ஜப்தி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். இவர் ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக பிபரல தனியார் நிறுவனமான தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடி கடன் பெற்று இருந்தார். இந்த கடனை வட்டியுடன் திருப்பி தர கோரி அதாவது ரூ.9 கோடி தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்துக்கு எதிராக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

appeal-withdrawn-after-out-of-court-settlement-in-sivaji-ganesans-annai-illam-property-case

இதில் சென்னை உயர்நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த மத்தியஸ்தர், "ஜகஜால கில்லாடி" படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கக் கோரி துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவினை அமல்படுத்த வேண்டும் என்று தன்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் வைத்து இருந்தது.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதற்கிடையே இந்த வீடு எனக்கு சொந்தமானது என்றும், என் தந்தை சிவாஜி எனது பெயருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், எனவே இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால் ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தான் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டு விட்டது. எனவே இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்தனர். மேலும் இந்த வழக்கினையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+