சூட்டோடு சூட்டாக போன மெசேஜ்.. டார்ச் ஒளியில் "கருகுதா" தாமரை? பாஜக ஓட்டை பிரிப்பது "இவரா"? பலே திமுக
சென்னை: திமுக கூட்டணி ஏற்கனவே, ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும்போது, மக்கள் நீதி மய்யமும், திமுகவுடன் ஐக்கியமாகும் என்று தெரிகிறது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு, மய்யம் வலுசேர்க்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அரசியலுக்கு வந்ததுமே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கையில் எடுத்த முதல் விஷயம் கிராமசபை கூட்டம்தான்.. தமிழக மக்களால் பல வருட காலம் மறக்கடிக்கப்பட்டிருந்த, கிராமசபை பற்றி கமல் சொன்னபோது யாருமே அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..

கமல்ஹாசன்: ஆனால், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமலே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஊட்டவும்தான், திமுகவும் இதே பாணியை கையில் எடுத்தது. முக ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கு முன்பு கிராம சபை கூட்டங்களை நடத்தினார் என்றால், அதற்கு முன்னோடி, கமல் என்பதை மறுக்க முடியாது.. அதுபோலவே, சட்டசபை தேர்தலுக்கு முன்பும் கூட்டங்களை நடத்தினார்..
செல்லுமிடமில்லாம் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்தது.. அதற்கு பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடந்தபோதும்கூட, மீண்டும் கிராம சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தியது கமல்ஹாசன்தான்.
கிராமசபைகள்: எனினும், என்னதான் கமல் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்தாலும், தேர்தல் என்று வரும்போது, கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்து பிரச்சாரங்களையும், வேட்பாளர்களையும் நிறுத்துவதில்லை என்று ஒரு குறை இருக்கவே செய்கிறது.
குறிப்பாக, கமல் "மேல்மட்ட" அளவிலேயே அரசியல் செய்து வருவதாகவும், கமல் நினைத்திருந்தால், ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, தானே நேரடியாக போட்டியிட்டிருந்தால், அது இன்னமும் அவருக்கு பலத்தை தந்திருக்குமே என்ற கருத்துக்களும் எழத்தான் செய்கின்றன..
அதிருப்திகள்: இதோ இப்போது எம்பி தேர்தலுக்கு, மய்யம் தயாராகிவரும்நிலையில், எப்படியும் தன் கட்சியின் மீதான குறைகளையும் அதிருப்திகளையும் கமல் போக்குவார் என்றே நம்பப்படுகிறது. அதற்கேற்றவாறு, 2 நாட்களுக்கு முன்பு கமல் பேசியபோது, "கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவாக்க வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததை கவனிக்க முடிந்தது.
கடந்த முறை தேர்தலில், எடுத்த எடுப்பிலேயே, குறிப்பிடத்தகுந்த வாக்குகளை, மய்யம் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன.. அதிலும் பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை பிரித்ததில், மய்யத்தக்கு நிறைய பங்கு இருந்தது.. என்றாலும், வரும் தேர்தலில் கிராமங்களிலும் வாக்குகளை தக்க வைக்க வேண்டிய அவசியம் கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
1+1 சீட்கள்: தற்போது, பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில், கமல்ஹாசனின் உறுதித்தன்மை அதிகமாகவே உள்ளதால், திமுக மற்றும் காங்கிரசுடன் கூட்டணியில் இணையும்போது, அந்த உறுதித்தன்மை மேலும் பலத்தையே பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக இருப்பதால், அவருக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இருந்தாலும், எப்படியாவது 2 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்.. அத்துடன், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம்..
உதயசூரியன்: திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள கட்சிகளே தற்போதும் நீடிப்பதாக தெரிகிறது. பாரிவேந்தர் மட்டும், பாஜக பக்கம் தாவியிருக்கிறார். வேல்முருகன் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. எனினும், புதிதாக இடம்பெற போகும் மய்யத்திற்கு, எத்தனை இடங்களை திமுக ஒதுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஒருவேளை, வைகோவுக்கு ஒதுக்கியதுபோல, 1+1 பாணியில் சீட்டுகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வற்புறுத்தினால், மய்யம் என்ன முடிவெடுக்கும் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய விஷயம்தான்.. உதயசூரியன் வெளிச்சத்தில் "டார்ச்" லைட் மங்கலாகிவிடுமா? அல்லது உதயசூரியனுடன் சேர்ந்தே பிரகாசிக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்!
-
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications