கிளாம்பாக்கம் டூ கூடுவாஞ்சேரி.. பொங்கலுக்கு சென்னையில் இருந்து பைக்கில் சொந்த ஊர் போறீங்களா.. கவனம்
சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பலரும் தயாராகி வருகிறார்கள்.. தற்போதைய நிலையில் ரயில்களின் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. பலர் அரசு பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் செல்வோர், செங்கல்பட்டு வழியாக போகும் போது கிளாம்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை மிக கவனமாக செல்லுங்கள்.. சாலை அந்த அளவிற்கு நன்றாக இருக்காது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆறு நாட்கள் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள், பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஆனால் ரயிலில் செல்ல ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொதுவாக பொங்கல் பண்டிகை காலத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி , பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் செங்கல்பட்டு வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவு சொந்த ஊருக்கு செல்வார்கள். இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகள் முடிந்த வரை சென்னையில் இருந்து திருப்போரூர் வழியாக செங்கல்பட்டுக்கு சென்று போகலாம்.
அதேபோல் செங்கல்பட்டுக்கு, தாம்பரத்தில் இருந்து, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் வழியாக பைக்கில் போகலாம். ஆனால் இதில் கிளாம்பாக்கத்தை கடந்து கூடுவாஞ்சேரியில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சாலை முழுவதும் படுமோசமாக உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் மையப்பகுதியிலோ அல்லது சாலையின் வலதுபுறமோ செல்வது அவ்வளவு நல்லது இல்லை. ஏனெனில் சாலைகளின் நிலை மோசமாக இருப்பது ஒருபுறம் எனில், பின்னால் வரும் வாகனங்கள் அசுர வேகத்தில் வரும்.. திடீரென பள்ளம் காரணமாக பிரேக் பிடித்தாலோ, அல்லது வேகத்தை குறைத்தோ இந்த பகுதிகளில் செல்லும் போது , பின்னால் வரும் வாகனங்கள் கவனிக்காமல் போனால் பெரிய விபத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பெருங்களத்தூர் இரும்புலியூர் பாலம் தொடங்கி, பரனூர் வரை வாகன நெருக்கம் மட்டுமின்றி, சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் இருக்காது. எனவே மெதுவாக கவனமாக செல்வதே, அந்த சாலை சிறந்ததாக இருக்கும். அங்கு சாலை மேம்பாட்டு பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. அதேபோல் சாலை நன்றாகவே இருந்தாலும் பள்ளம் ஆங்காங்கே இருக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என பயணிகள் கூறினார்கள்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications