கிளாம்பாக்கத்தில் இருந்த ஒரு குறையும் நீங்குது.. பயணிகளுக்கு குட் நியூஸ்.. இது நடந்தால் சூப்பர்தான்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடிய விரைவில் மலிவு விலையில் உணவகம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, கோவை என அனைத்து நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் ஆம்னி பஸ்களும் இங்கிருந்தே வெளியூர்களுக்கு பெரும்பாலும் செல்கின்றன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமித்துள்ளது.
பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும், உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கடைகள், ஏடிஎம்கள்: பேருந்து நிலையம் துவக்கப்பட்ட புதிதில் பல்வேறு சேவை குறைபாடுகள் இருந்ததை பயணிகள் சுட்டிக்காட்டினர். அதாவது போதிய அளவு ஏடிஎம் வசதிகள் இல்லாதது.. கடைகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டது. தற்போது, முன்னணி வங்கிகளின் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல், ஆங்காங்கே கடைகள், உணவகமும் உள்ளது.
மலிவு விலையில் உணவகம்: பேருந்து நிலயமும் தூயமையாக பராமரிக்கப்பட்டு வருவதற்கு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கழிவறைகளும் சுத்தமாக பராமரிக்கபபடுகின்றன. தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணியில் எப்போதும் ஈடுபட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்படி உயரதரமாக பராமரிக்கப்பட்டாலும் மலிவு விலையில் உணவகம் எதுவும் இல்லை என்ற ஆதங்கம் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் சிவசங்கர்: இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் கூடிய விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையிலான உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பயணிகள் மகிழ்ச்சி: மலிவு விலையில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில் கிளாம்பாக்கத்திற்கு வருபவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் சொல்லும் கருத்தாக உள்ளது. ஏனெனில், தற்போது நகரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வருவதேற்கே கிட்டதட்ட 2 மணி நேரம் ஆகிவிடுகிறது.
இதனால், இரவில் வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருக்கும் உணவகங்களில் சற்று விலையை கேட்டவுடன் பர்சை பார்த்த பிறகே சாப்பிடுவது பற்றி யோசிக்கிறர்கள். எனவே, தற்போது மலிவு விலையில் உணவு கிடைக்கும் பட்சத்தில் பயணிகளின் மனதும் வயிறும் நிறையும் என்று அவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications