தீபாவளிக்கு ரெடியான தி நகர்.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! பாருங்க இந்த வழியாக போக முடியாது
சென்னை: சென்னையில் தீபாவளியன்று தெருவுக்கு தெரு பட்டாசு காகிதங்கள் இருக்கிறதோ இல்லையோ. ஆனால் நிச்சயம் டிராபிக் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெய்யும் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து போக்குவரத்தை துண்டித்து நெரிசலை ஏற்படுத்தும் எனில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தீபாவளியன்று மக்கள் வெள்ளம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்.
குறிப்பாக தி நகர் பகுதியில் சொல்லவே வேண்டாம். சென்னைவாசிகள் போர் அடிக்கிறது என்றால் கூட தி நகர் பக்கம்தான் போவார்கள்.

போக்குவரத்து மாற்றம்
இப்படி இருக்கையில் விழா நாட்களில் இப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கு சவாலான விஷயம். இந்த ஆண்டு போக்குவரத்தை முறைப்படுத்தி நெரிசலை குறைக்க காவல்துறை சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று முதல் 24ம் தேதி வரை தி நகர் பகுதியில் சில மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதாவது இன்று முதல் இப்பகுதியில் வணிக மற்றும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஆட்டோ செல்ல தடை
பிகாசம் சாலையிலும், இப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும். அதேபோல ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, பாஷ்யம் சாலை மற்றும் தண்டபாணி தெரு ஆகியவற்றிலும் வாகனங்களை கட்டணத்துடன் பார்க்கிங் செய்துகொள்ளலாம். பார்க்கிங் வசதி இப்படியெனில், போக்குவரத்து வசதியை பொருத்த அளவில் தியாகராஜர் தெரு-தணிகாசலம் சாலையிலிருந்து பனகல் பார்க்கை நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
இது மட்டுமல்லாது பிருந்தாவன் ஜங்ஷன் - பனகல் பூங்கா, வடக்கு உஸ்மான் சாலை-கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்கா, ரோகிணி சிக்னல் சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா, வடக்கு உஸ்மான் சாலை-மகாராஜபுரம் சந்தானம் சாலையிலிருந்து பனகல் பூங்கா மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்து மேட்லி சந்திப்பு நோக்கி செல்லும் வழிகளிலும் ஆட்டோக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் இது போன்று தடை விதிக்கப்படுவது இயல்புதான் என்றாலும் இந்த முறை கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு
அதேபோல தீபாவளியன்று பலரும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தி நகர் மட்டுமல்லாது மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் கோயில்கள், பெசன்ட் நகர் கடற்கரை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். என்ன மக்களே ஷாப்பிங்க் செய்ய நீங்களும் ரெடியா?
-
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல்












Click it and Unblock the Notifications