Flashback வித்யாசாகர் வரனை முதலில் மறுத்தேன்.. நல்லவேளை மிஸ் செய்யவில்லைனு பூரித்த மீனா
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாததால் அவர்களது 13 ஆண்டு கால மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்து நினைவலைகள் பகிரப்படுகின்றன.
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா சிறு வயது முதல் நடித்து வருகிறார். ரஜினியுடன் குழந்தையாக நடித்த இவர் பின்பு எஜமான் படம் மூலம் அவருக்கே ஜோடியாக நடித்தார்.
ரஜினி, கமல், மோகன்லால், வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த மீனாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் படம் (மலையாள) பெரிதும் பெயரை பெற்றுத் தந்தது. அது போல் தற்போது அதன் இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது.

திருமணம்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. சுமார் 13 ஆண்டுகளாக மீனாவை வித்யாசாகர் தனது கண்ணுக்குள் வைத்து பார்த்து வந்தது போல் இருந்தாராம். மீனாவின் குடும்பத்தினருக்கு அண்மையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொற்றிலிருந்து மீண்ட குடும்பம்
இவர்கள் அந்த தொற்றிலிருந்து மீண்டாலும் வித்யாசாகருக்கு மட்டும் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. இந்த பாதிப்பு மிகவும் தீவிரமடைந்ததால் அவர் சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வித்யாசாகர்
இங்கு 95 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிர் நேற்று முன் தினம் பிரிந்தது. இதையடுத்து மீனாவின் கணவரின் உடலுக்கு அவரும் அவரது மகளும் இறுதி சடங்குகளை செய்தனர். வித்யாசாகரின் இறப்பு மீனாவுக்கும் அவரது மகளுக்கும் பேரிழப்பு. எனினும் மீனா, அவரது கணவரின் நினைவலைகள் பகிரப்படுகின்றன.

ரியாலிட்டி ஷோ
ஒரு ரியாலிட்டி ஷோவில் மீனா தனது கணவர் வித்யாசாகருடன் கலந்து கொண்டார். அப்போது சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் எனக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தனது ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு வரனை பார்த்துவந்தனர்.

பக்காவாக பொருந்திய ஜாதகம்
அப்போது தனது ஜாதகத்துடன் வித்யாசாகரின் ஜாதகம் பக்காவாக பொருந்தியிருந்தது. இதையடுத்து நாங்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசினோம். ஆனால் அவர் மீது எனக்கு பெரிய ஈர்ப்பெல்லாம் ஏற்படவில்லை. ஒரு வேளை இருவரும் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என்பதால் இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்றேன்
சில நாட்கள் கழித்து வித்யாசாகரை தொடர்பு கொண்ட நான் தொடர்பு கொண்டு தனக்கு இந்த வரனில் விருப்பம் இல்லை என்றேன். அவரும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு எனக்கு பிடித்தமான வரன் கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் நான் நல்லதொரு வரனை இழக்க போகிறாய் என எனது உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து நான் யோசித்து அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டேன்.

13 ஆண்டு கால நினைவுகள்
அன்று முதல் என்னை வித்யாசாகர் நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றார். மீனாவின் தோழிகளும் மீனாவுக்கு வித்யாசாகரை விட நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மனதார மட்டுமே எண்ணி பார்த்து பூரிக்கும் நிலை மீனாவுக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் வித்யாசாகர் திரும்பி வராத இடத்திற்கு சென்றுவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications