ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து நடந்த என்கவுண்டர்கள்.. போலீஸ் சொல்வது என்ன?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து ரவுடிகளை கைது செய்து வருகிறார்கள். இதில் ஒருசில ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் தனது புதிய வீட்டின் கட்டுமான பகுதியை பார்வையிட்டு கொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களில் 25 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ரான் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே திருவேங்கடமும், இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கில் தொடர்புடைய ஆயுதங்களை எடுப்பதற்காக மணலியில் உள்ள அவரது வீட்டிற்கு ரவுடி திருவேங்கடம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டுமந்தை செல்லும் பாதையில் இயற்கை உபாதைக்காக வாகனத்தை போலீசார் நிறுத்திய போது, போலீசாரை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓட முயன்றார்.
அப்போது, போலீசார் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட போது, மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்களை நோக்கி சுட்டார். இதனால் தற்காப்பிற்காக போலீசார் திருப்பி சுட்டனர். இதில் காயம் அடைந்த திருவேங்கடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மிக முக்கிய நபராக திருவேங்கடம் அறியப்பட்டார். அண்மையில் காக்காதோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ரவுடி சீசிங் ராஜாவின் பெயரும் தொடக்கம் முதலே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடிபட்டது. சீசிங் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்த வந்தார். தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கடந்த சில மாதங்களாக தேடி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசாரிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகியிருந்தார். ஆனாலும் தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று இரவு சிக்கியுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலில் சீசிங் ராஜா பலியாகியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் 3 பேர் இதுவரை என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீசிங் ராஜாவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பும் இல்லை எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications