Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி படுக்கை வசதி, பெட்ஷீட் ரூ.20! தலைகாணி ரேட் இதுதான்.. ரூல்ஸ் சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகள், எந்தவிதமான அசௌகரியத்துக்கும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே, ரயில்வே நிர்வாகம் ஏராளமான வசதிகளை செய்து தந்து வருகிறது. அந்தவகையில், ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கான புதிய சேவையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.. அதாவது ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இனி படுக்கை விரிப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன தெரியுமா?

பொதுவாக, ரயில் பயணங்களில் ஏ.சி. வகுப்புகளில் மட்டுமே படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வந்தன.. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள், தங்களுக்கும் படுக்கை விரிப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தனர்..

Train Railway Non AC Sleeper compartments

இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஸ்லீப்பர் வகுப்பிற்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை பிரிவில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகளை வழங்கும் சேவையை கொண்டுவந்துள்ளது.. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள், இனி பயணத்தின்போது சுகாதாரமான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளைக் கட்டண அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.

AC வசதி இல்லாத ஸ்லீப்பர் கிளாஸ்

முதற்கட்டமாக 10 ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. மேலும், ஜனவரி 1 முதல் ஏ.சி. ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் (Sanitized) செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளை கோரலாம்..

அதாவது படுக்கை விரிப்புகள் கோரும் பயணிகள், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, இந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட விரிவுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.. அப்படியனால் விரிப்பு, கம்பளி, தலையணை, கை துண்டு போன்றவை இந்த விரிவுத்தொகுப்பில் அடங்கும் என தெரிகிறது.

தலையணை ரூ.30, பெட்ஷீட் ரூ.20

அந்த சேவை குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணியருக்கு, முதல்முறையாக படுக்கை விரிப்பு வசதி, சென்னை ரயில் கோட்டத்தில் வரும் ஜனவரி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.. இது ரயில்வேயில் முன்னோடி திட்டமாகும்.. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போதே இந்த வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்..

இந்த படுக்கை வசதி தேவை என்றால், அதற்குரிய ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.. அல்லது ரயிலில் பயணிக்கும்போது, உரிய கட்டணம் செலுத்தி, படுக்கை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் படுக்கை விரிப்பு, தலையணைக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தலையணைக்கு மட்டும் 30 ரூபாய், படுக்கை விரிப்பு மட்டும், 20 ரூபாய் என்றும் வசூலிக்கப்படும்..

10 ரயில்களில் வசதி

முதல் கட்டமாக, நீலகிரி, மங்களூரு, மன்னார்குடி, திருச்செந்துார், பாலக்காடு, சிலம்பு, நாகர்கோவில், ஆலப்புழா, திருவனந்தபுரம் உள்பட, 10 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது...

ரயில்வே கட்டண உயர்வை தவிர, மாற்று வழிகளில் வருவாய் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சேவை பேருதவியாய் இருக்கும். அந்தவகையில், இப்புதிய சேவையினால், ரயில்வேக்கு வருடந்தோறும் 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பானது பயணிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+