ரஜினிகாந்த் யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும்.. ஆனால்.. ஒரு சிக்கல்.. விளாசி தள்ளிய திருமாவளவன்!
சென்னை: நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வழிகாட்டும் நிலைப்பாடாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நடவடிக்கை அமைய வேண்டும் என விசிக எம்.பியும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல "ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் ஆனால், ஆளுநர் தனது பொறுப்பை மீறி செயல்பட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பி அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், "ஆளுநர் ஆர்.என்.ரவி முழுநேர அரசியல்வாதியாக செயல்படுகிறார்" என்றும் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கு இணைக்க போக்கை உருவாக்க வேண்டியதுதான். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். ஆளுநரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது" எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்க கூடியதாக ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. வரும் 12ம் தேதி வரை கூட்ட தொடரை நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள். பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையின் எதேச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் திரும்ப பெற்றனர்.
மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இந்த மழைக்கால கூட்டத்தொடர் இருந்தது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி கொண்டது. அதில் முக்கியமானது மின்சார திருத்த சட்ட மசோதா. மின்சார விநியோக உரிமையை தனியாருக்கு விடும் இந்த மசோதாவை விசிக கடுமையாக எதிர்க்கிறது.
பீகாரில் பாஜகவுக்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு ஆச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்து உள்ள முடிவு வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக இது விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக இது அமைய வேண்டும்" எனக் கூறினார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications