சொன்ன சொல்லை காப்பாற்றும் பாஜக.. நிதிஷ் குமார்தான் பீகார் முதல்வர்.. உறுதியாக அறிவித்த சுஷில் மோடி!
பாட்னா: பீகார் தேர்தலில் வென்றுள்ள பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார் என்று பாஜக கட்சி அறிவித்துள்ளது.
பீகார் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 125 இடங்களில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைக்கிறது
இந்த தேர்தலில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிரடியாக வென்றுள்ளது . 110 இடங்களில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வென்றுள்ளது.

அதிக இடம்
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும்.. கூட்டணிக்குள் பாஜகதான் அதிக இடங்களை வென்று இருந்தது. இந்த கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களில் வென்றது. இதனால் குறைந்த இடங்களில் வென்ற நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்குமா என்று கேள்வி எழுந்தது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல் பாஜக பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், நிதிஷ் குமார்தான் முதல்வராக நீடிப்பார் என்று பாஜக உறுதி செய்துள்ளது. முதல்வரை மாற்றும் எண்ணம் இல்லை, நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

சுஷில் மோடி
சுஷில் மோடி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெற மோடி மற்றும் நிதிஷ் குமார்தான் காரணம். எங்களுக்கு கிளியர் மெஜாரிட்டியை மக்கள் வழங்கி உள்ளனர். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத வதந்திகளை கிளப்பினார்கள்... ஆனால் மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

முதல்வர் யார் ?
நிதிஷ் குமார்தான் இந்த முறையும் முதல்வராக இருப்பார். ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமாக இருக்கும். கூட்டணிக்குள் யார் வேண்டுமானாலும் அதிக இடங்களை பெறலாம். ஆனால் கூட்டணியின் வெற்றிக்கு நிதிஷ் குமார் முக்கிய காரணமாக இருந்தார். கொரோனா, வெள்ளம், வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை நிதிஷ் குமார் நேர்த்தியாக கையாண்டார். இதனால்தான் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மக்கள் ஆதரவு
ஆட்சிக்கு ஆதரவாக அலை நிலவி வருகிறது. அதனால் எங்களுக்கு வாக்கு விழுந்துள்ளது. தொலைநோக்கு பார்வை கொண்டவர் நிதிஷ் குமார். அவர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக நீடிப்பார், என்று சுஷில் மோடி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே நிதிஷ் குமார்தான் முதல்வராவார் என்று பாஜக தலைவர்கள் அறிவித்த நிலையில்.. தற்போது சொன்னபடி முதல்வர் பதவியை நிதிஷுக்கு பாஜக வழங்கி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications