"ஜீரோ சீட்.." பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் விஜய்க்கும் ஏற்படுமாம்.. அவரே சொல்லி இருக்காரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் படுதோல்வியை அடைந்தார். இருப்பினும், அது அவரது கட்சிக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்காது என்றே சொல்லலாம். இதற்கிடையே இதே பிரசாந்த் கிஷோர் தான் முன்பு ஒரு நேர்காணலில் தனது கட்சிக்கும் விஜய் கட்சிக்கும் கிட்டத்தட்ட ஒரே போன்ற தேர்தல் முடிவுகளே கிடைக்கும் என்பது போல பேசியிருந்தார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார். அவரது ஜன் சூராஜ் கட்சி அங்குத் தனித்துக் களமிறங்கியது. பாஸ்வான் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், கூட்டணி முடிவுகளை நிராகரித்த பிரசாந்த் கிஷோர் தனித்துக் களமிறங்கும் என்று அறிவித்தார்.

Bihar poll results Prashant Kishor party has no win his interview on Vijay party is shared by many

பிரசாந்த் கிஷோர்

அடுத்து பிரசாந்த் கிஷோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது. அவர் சொந்தத் தொகுதியான கார்கஹர் அல்லது ஆர்ஜேடி கோட்டையான ராகோபூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்.

ஏனென்றால் தேர்தலில் போட்டியிட்டால் ஒரே தொகுதியில் தான் கவனம் செலுத்த முடியும். தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்யலாம் என்பதால் அவர் போட்டியிடவில்லை. அதேபோல கடைசி வரை பீகார் முழுக்க பம்பரமாகச் சுற்றி பிரச்சாரமும் செய்தார். இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தபோது பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியே கிடைத்தது.

படுதோல்வி

தொடக்கத்தில் ஓரிரு தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், இப்போது மாலை எந்தவொரு தொகுதியிலும் ஜன் சூராஜ் கட்சி முன்னிலையில் இல்லை. இதன் மூலம் ஜன் சூராஜ் கட்சி தான் போட்டியிட்ட முதலில் தேர்தலை ஜீரோ இடத்துடன் முடித்துள்ளது. அதேநேரம் இது பிரசாந்த் கிஷோர் எதிர்பார்க்காத ஒன்று என்று சொல்லிவிட முடியாது.

அவர் தொடக்கம் முதலே பீகாரில் தங்கள் கட்சிக்கு இரு முடிவுகள் மட்டுமே கிடைக்கும் என சொல்லி வந்தார். கிடைத்தால் பீகாரில் மிக பெரிய வெற்றி கிடைக்கும்.. அப்படி இல்லையென்றால் மிக மோசமான தோல்வி கிடைக்கும்.. இரண்டிற்கும் நடுவில் 20- 30 சீட் என்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றே பிரசாந்த் கிஷோர் சொல்லி வந்தார். இப்போது அதுதான் அப்படியே நடந்துள்ளது.

என்ன சொன்னார்

மேலும், பழைய நேர்காணல் ஒன்றில் தனது கட்சிக்கும் இதுதான் நிலைமை, விஜய் கட்சிக்கும் கூட இதே நிலை தான் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் தந்தி டிவிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் இப்போது அரசியலில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. மக்கள் ஊழலற்ற புதிய அரசியல் மாற்றை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு விஜய் சரியான நபராக இருப்பார் என்றே கருதுகிறேன்.

விஜய்

தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் தருவதாகவே இருக்கும். பீகாரிலும் கூட எங்களுக்குக் கிடைத்தால் பெரும் வெற்றி.. இல்லை என்றால் படுதோல்வி தான். இடைப்பட்ட முடிவு இருக்காது. அதேபோல விஜய்யும் 10 அல்லது 12% வாக்குகளைப் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை..

இரண்டே முடிவுகள் தான்.. ஒன்று மக்கள் மாற்றுச் சக்தியாக ஏற்றுப் பெரிய வெற்றியைத் தருவார்கள்.. அப்படி இல்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் பணியைச் செய்யச் சொல்வார்கள். இதற்கு நடுவே எதுவும் இருக்காது. எனவே, விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியிருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+