மசூத் அசாரை விடுவித்ததே பாஜகதான்.. ராணுவ வீரர்களை அரசு காக்கவில்லை.. ராகுல் பரபர குற்றச்சாட்டு!
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்ததே பாஜக அரசுதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்ததே பாஜக அரசுதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காலையில் அவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதன்பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி இதில் பேசினார்.

ராகுல் பேட்டி
சென்னையில் பேட்டியளித்த ராகுல் காந்தி, தேர்தலுக்காக தமிழகம் உட்பட பல தொகுதிகளில் காங். கூட்டணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் போதிய கூட்டணிகளை ஏற்படுத்தவில்லை என்பது பொய்யானது. பீகார், ஜம்முவில் நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். பாஜகவுக்குதான் போதிய கூட்டணிகள் அமையவில்லை.

நோக்கம் என்ன
சமூக நல்லிணக்கம் எங்களின் நோக்கம். பொருளாதார வளர்ச்சி குறைவது மக்களின் கோபத்தை உணர்த்துகிறது. பாஜக இதை புரிந்துகொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாடு முன்னேற்றம் அடையும்.

ஜிஎஸ்டி சட்டம்
நாங்கள் ஜிஎஸ்டியில் நிறைய மாற்றங்களை செய்ய போகிறோம். ஜிஎஸ்டியால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதை நாங்கள் மாற்றுவோம். ஜிஎஸ்டி மாற்றம் மூலம் வரிகள் குறையும், நிறைய பலன் கிடைக்கும்

புல்வாமா தாக்குதல்
புல்வாமாவில் 45 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அரசு இவர்களை காப்பதற்காக எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் இவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அரசு என்ன செய்தது. நமது பாதுகாப்பு வீரர்களை அரசு கைவிட்டுவிட்டது.

மசூத் அசார்
மசூத் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். பாஜகதான் இதை விளக்க வேண்டும்: ஏன் மசூதை விடுதலை செய்தார்கள் என்று, ஆலோசகர் அஜித் தோவல் இவர்களுடன்தான் இருந்தார் என்பதை மறக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications