அசிங்கம்! பாஜக பிரமுகரின் “லீலைகள்” - பல பெண்களிடம் ஆபாச படமெடுத்து பணம் பறிப்பு - திருச்சியில் கைது
சென்னை: நடிகை உட்பட பல பெண்களிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் ஜெயராம் பாண்டியன். பாஜகவை சேர்ந்த இவர் மீது சென்னை வளசரவாக்கம் ஒய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்த ராம்குமார் என்ற திரைப்பட இயக்குநர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்து இருக்கிறார்.
இவர் காவல் நிலையத்தில் அளித்து இருக்கும் புகாரில், "நான் திரைப்பட இயக்குநராக உள்ளேன். இளம் நடிகர்களை நடிக்க வைப்பதற்காக திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் மைதிலி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர் சாலை விபத்தில் கணவரை இழந்தவர்.

கடந்த 7 ஆண்டுகளாக நானும் அவரும் ஒன்றாக வசித்து வந்து உள்ளேன். இவர் இதற்கு முன்பாக தனது குடும்ப நண்பரான பாஜக பிரமுகர் ஜெயராம் பாண்டியன் என்பவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அதை காட்டி மிரட்டி வருவதுடன் செல்போன் மூலமாக ஆபாசமாக பேசி தொந்தரவு வழங்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். இதனை அறிந்துகொண்ட பாஜக பிரமுகர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான பாஜக பிரமுகர் ஜெயராம் பாண்டியனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர் பதுங்கி இருந்த பகுதிக்கு சென்ற போலீசார் ஜெயராம் பாண்டியனை கைது செய்தனர். அதை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர் தன்னை பாஜக பிரமுகர் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். கூடுதல் விசாரணையில் மைதிலி மட்டுமின்றி மேலும் பல பெண்களையும் ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்தது அம்பலமாகி உள்ளது.
அத்துடன் மைதிலியிடமும் அவர் பணம் கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டியதும் தெரியவந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜெயராம் பாண்டியன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
திருச்சி–சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு அறிவிப்பு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை!












Click it and Unblock the Notifications